மே 4ம் தேதி த்ரிஷா பிறந்தநாளை கொண்டாட விஜய் வெளிநாடு போறாரா?.. சிடிஆர் நிர்மல் ஒரே அடி!..

 
மே 4ம் தேதி த்ரிஷா பிறந்தநாளை கொண்டாட விஜய் வெளிநாடு போறாரா?.. சிடிஆர் நிர்மல் ஒரே அடி!..

தேர்தல் முடிந்த கையோடு உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய்க்கு கிளம்பிச் சென்றுவிட்டார். அடுத்ததாக கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானலுக்கு ஸ்டாலினும் தனது மனைவியுடன் கிளம்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், வரும் மே 4ம் தேதி தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வரும் நாளில் தவெக தலைவர் விஜய் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பிச் செல்லப் போகிறாரா? என செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு தவெகவை சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார், இதெல்லாம் பென் மீடியாவின் நரேட்டிவ் தான் என்றும் விஜய் எங்கேயும் போகவில்லை, அனைத்தும் பொய்யாக கிளப்பப்படும் வதந்திகள் மட்டுமே எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதே நாளில் தான் நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளும் மே 4ம் தேதி வரவுள்ள நிலையில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் வெளிநாட்டுக்கு கிளம்பிப் போக போகிறார் என சோஷியல் மீடியாவில் சில வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு எதிரான போலியான செய்திகளை தொடர்ந்து திமுக தரப்பு பரப்பி வருவதாக கூறுகின்றனர். விஜய் அதிமுகவில் இணைந்து விடுவார், பாஜகவின் பி டீம், தேர்தலில் போட்டியிட மாட்டார், அவரது வேட்பு மனு செல்லாமல் போய்விடும், சங்கீதா விஜய் மீடியாக்கள் முன்பாக பேட்டிக் கொடுத்து விஜய் அரசியலுக்கே வேட்டு வைப்பார் என பல விதமான போலியான செய்திகளை திமுகவின் ஆதரவு ஊடங்களே பரப்பின எனக் கூறுகின்றனர்.

வரும் மே 4ம் தேதி விஜய் எந்தளவுக்கு வாக்கு சதவீதத்தை பெறுகிறார் என்பதை காண ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

From Around the web