">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நயன்தாராவுக்கு தோஷம் இருக்கு… அந்த கோவிலுக்கு போயிட்டு வந்ததும் கல்யாணம்!
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். தர்பார் படத்துக்காக நயன்தாரா மும்பை சென்ற போது கூட விக்னேஷ் சிவன் அங்கு சென்றுள்ளார்.
விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்ப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாராவின் நம்பிக்கையுள்ள ஜோதிட ஒருவர் அவருக்கு திருமணம் தோஷம் இருப்பதாக கூறி சில கோவில்களுக்கு சென்று வழிபட சொல்லியிருக்கிறார். அந்த வகையில் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவான் மணக்கோலத்தில் சிவனை வேண்டிப் பிரார்த்தித்தால் திருமணத்தடை முற்றிலும் விலகிவிடும் பின்னர் திருமணத்தை வெச்சிக்கோங்க எனச் சொல்லியிருக்கிறார்.
தற்ப்போது கொரோனா ஊரடங்கினாள் நயன் அங்கு செல்லமுடியாமல் இருக்கிறாரம். எனவே லாக்டவுன் முடிந்ததும். அங்கு சென்று வழிபட்டு பின்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் தான் நயன் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார் என முன்பே கணித்து கூறினாராம். அதனால் தான் கிறிஸ்துவ பெண்ணாக இருந்தாலும் நயன் அந்த ஜோசியர் மீதும் ஜோதிடத்தின் மீதும் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.