என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்
Kollywood: தற்போது சினிமா உலகத்தில் தொடர்ந்து நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை குறித்து வரிசையாக பேசி வருகின்றனர். இது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்கள் அதிகளவில் அடிபட்டு வரும் நிலையில் தற்போது தமிழின் முக்கிய இயக்குனர் குறித்து நடிகை ஒருவர் கூறிய குற்றச்சாட்டு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை லேகா வாஷிங்டன். இவர் உன்னாலே உன்னாலே, வா, அரிமா நம்பி, ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறைந்த படங்களில் நடித்தாலும் ரேகா வாஷிங்டன் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றவர்.
இதையும் படிங்க: நேரா கோர்ட்டுக்குதான் வருவேன்!.. வந்தா என்னை கடத்திடுவாங்க!.. ஜெயம் ரவி உயிருக்கு ஆபத்தா?..
இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வைக்கப்பட்ட புகார் ஒன்று வைரலாகி வருகிறது. அதுவரை கேமியோ ரோலில் மட்டுமே நடித்து வந்த தனக்கு பிரபல இயக்குனர் ஒருவர் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார்.
நான் மகிழ்ச்சியானேன். ஆனால் உடனே அவர் எனக்கு என்ன கிடைக்கும் என என்னிடம் கேட்டார். நான் ஒரு நல்ல நடிகை கிடைக்கலாம் என கூறினேன். ஆனால் அவர் அதற்கெல்லாம் தலை அசைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவருடைய எண்ணத்தை புரிந்து கொண்ட நான், என்னால் உங்களுடன் படுக்க முடியாது என கூறினேன்.
இதையும் படிங்க: அவங்களுக்கு மட்டும் தனி சட்டமா?… சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்!
இருந்தும் அவர் என்னை தொடர்ந்து வலியுறுத்தினார். பட வாய்ப்பு கூட வேண்டாம் என நினைத்தேன் இருந்தும் என்னை நடிக்க வைத்தார். ஆனால் அவர் தன்னுடைய நடிகை ஒருவருடன் வெளிநாட்டு படப்பிடிப்பின் போது கசமுசா செய்திருக்கிறார்.
இதய நோயாளியின் அவர் எடுத்துக்கொண்ட நிறைய வயகரா மாத்திரைகள் அவருக்கு அந்த சமயத்தில் மாரடைப்பை ஏற்படுத்தியதாம். இதைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டார். இதுதான் கர்மா என லேகா வாஷிங்டன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட இயக்குனர் பெயரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.