More
Categories: Cinema News latest news

லியோவால் நொந்து நூடுல்ஸான லலித் குமார்!.. முதல் நாளில் அப்படி வசூல் செய்தும் முகத்துல சந்தோஷமே இல்லையே?..

முதல் நாள் சொன்ன லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூலையே உலக மகா உருட்டு என நெட்டிசன்கள் விளாசி தள்ளிய நிலையில், இரண்டாம் நாளில் கப்சிப்பென வசூல் விவரத்தை அறிவிக்காமல் அமைதியாகி விட்டார் தயாரிப்பாளர் லலித் குமார்.

மேலும், லியோ படத்தை ஒரு வாரமாவது கடைசியாக முட்டுக் கொடுத்து ஓட வைக்க வேண்டுமே என்கிற பாரம் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து லலித் குமார் மீது விழுந்த நிலையில், சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: எவ்ளோ வேணா தரேன்!.. எதையும் வெளியே சொல்லிடாதீங்க.. சிவகார்த்திகேயனின் டீலிங்கை அம்பலப்படுத்திய பிரபலம்?..

ஆனால், முதல் நாளில் 148.5 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் நம்பர் ஒன் வசூல் சாதனை படத்தை கொடுத்த தயாரிப்பாளர் போல சந்தோஷமாக எல்லாம் இல்லாமல் கடும் மன விரக்தியில் வாரிசு படத்தை முடித்து விட்டு அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எல்லாம் எப்படி முட்டுக் கொடுத்து 300 கோடி வடை சுட்டார்களோ அதே போலத்தான் லலித் குமார் உள்ளார் என அவரது பேட்டி புகைப்படங்களை ட்ரோல் மெட்டீரியலாக அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் மாற்றி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு கலாநிதி மாறன் அடைந்த சந்தோஷத்தின் எதிரொலியாகத் தான் சம்பளத்தை தாண்டி ஷேர் மற்றும் கார் கொடுத்தார் என்றும் அதெல்லாம் என்னால மாஸ்டர் படத்திலேயே கொடுக்க முடியவில்லை என்பதை மறைமுகமாக லலித் சொல்லி வருவது வேடிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: இதனால்தான் லியோ படத்தில் நடிக்கவில்லை!.. ரிலீஸுக்கு பின் உண்மையை சொன்ன விஷால்…

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் அப்போ சேவியர் பிரிட்டோ இல்லையா? இவர் தானா? என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இரண்டாம் நாள் வசூல் பாதியாக குறைந்த நிலையில், அதை அறிவிக்கவே இல்லை என கலாய்த்து வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts