பாபா படம் ஃபிளாப்!.. ரஜினி கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன லிங்குசாமி!..

Published on: October 30, 2023
rajini
---Advertisement---

Rajinikanth: ஆனந்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக மாறியவர் லிங்குசாமி. அடுத்து ரன் என்கிற ஆக்‌ஷன் கதையை கையில் எடுத்தார். விஜய்க்கெல்லாம் கதை சொல்லி அவர் நடிக்காமல் வேறு சில ஹீரோக்களுக்கு போய் பின்னர் மாதவன் அந்த கதையில் நடித்தார். மாதவனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். இந்த படத்தில்தான் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி வில்லனாக அறிமுகமானார்.

இந்த படமும் லிங்குசாமிக்கு சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து பையா, ஜீ, சண்டக்கோழி, அஞ்சான் என சில திரைப்படங்களை இயக்கினார். விஷாலை வைத்து சண்டக்கோழி 2 படத்தையும் இயக்கினார். ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. தெலுங்கு சினிமாவுக்கு சென்று வாரியர் என்கிற படத்தையும் இயக்கினார்.

இதையும் படிங்க: விஜய் நடிச்சிருந்தா அந்த படம் ஓடியிருக்காது!.. பல வருடம் கழித்து லிங்குசாமி சொன்ன ரகசியம்…

இப்போது எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக உழைத்து வருகிறார். ஒருபக்கம், ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். ரன் படம் பற்றி பேசும் போது அப்படம் பற்றி பல தகவல்களையும் லிங்குசாமி பகிர்ந்து கொண்டார். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவர் நடிப்பில் பாபா படம் உருவானது போது ரன் படமும் ரெடியாகிவிட்டது. பாபா படம் வரும் தேதியில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. எனவே, ரன் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தேன். ஆனால், தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பாபா படம் வெளியாகி 20 நாட்கள் கழித்து ரன் படம் வெளியானது. பாபா படம் சரியாக போகவில்லை. ஆனால், ரன் நன்றாக ஓடியது. ரஜினி சார் திரையுலகில் விசாரித்தபோதும் தொடர்ந்து 3 வாரங்களாக பாபாவை விட ரன் படம் நல்ல வசூலை பெறுவதாக சொல்லவே, அவர் ரன் படத்தை பார்த்தார்.

உடனே என்னை நேரில் வரவழைத்து அப்படம் பற்றி பேசினார். அதில், சில காட்சிகளை சொல்லி பாராட்டினார். மேலும், எனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டார். அதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் அவரின் வெறித்தனமான ரசிகன். அவர் நடித்த மூன்று முகமும், பில்லாவும், அண்ணாமலையும், பாட்ஷாவும் எப்போதும் என் நினைவில் இருக்கும். எனவே, அவருக்கு என்னிடம் கதையே இல்லை. எந்த காட்சியை யோசித்தாலும் அது நான் எதிர்பார்த்ததை விட கீழே இருந்தது. எனவேதான், அவரை வைத்து நான் படம் இயக்கவில்லை.

இதையும் படிங்க: இந்த காரணத்தால் தான் நயனால் பையா படத்தில் நடிக்க முடியவில்லை… சீக்ரெட்டை உடைத்த லிங்குசாமி

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.