யோகி பாபுவை ராம் பாலா எப்படி எல்லாம் அசிங்கப்படுத்துவார் தெரியுமா?.. லொள்ளு சபா எஸ்தர் ஓபன் டாக்!..

தமிழ் சினிமாவில் அனைத்து காமெடி நடிகர்களும் ஹீரோவாக நடிக்க கிளம்பிய நிலையில் அந்த இடத்தை சாமார்த்தியமாக பயண்படுத்திக்கொண்டு வருகிறார் நடிகர் யோகி பாபு. வாய்ப்புகள் அமையும் பல படங்களில் காமெடியனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் பேலன்ஸ் செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் யோகி பாபுவுக்கு ஆரம்ப காலத்தில் நடந்த அவமானங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் லொள்ளு சபா எஸ்தர்.
பாபு ஆரம்ப காலத்தில் லொள்ளு சபாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். மேலும், யோகி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நிலையில், யோகி பாபுவாக மாறினார். அதையடுத்து படிப்படியாக முன்னேறி பட்டத்து யானை, மான் கராத்தே, அரண்மனை, காக்கி சட்டை, வீரம், ரெமோ, ஜுங்கா, கோலமாவு கோகிலா என பல படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறியுள்ளார். ரிலீஸாகும் படங்களில் யோகி பாபு இல்லாத படமே இல்லை என்பது போல் அவரின் நிலை இன்று மாறியுள்ளது.

நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்க சென்ற பின்பு எந்த படங்களிலும் காமெடியனாக நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. மேலும், யோகி பாபு மண்டேலா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமானார். அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பேய் மாமா, பன்னி குட்டி, லக்கி மேன், படகு, தூக்குதுரை, யானை முகத்தான் போன்ற பல படங்களில் முன்னணி காதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அவர், காமெடியனாக நடிக்க கிடைக்கும் பட வாய்ப்புகளையும் நழுவ விடாமல் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார்.
ஆரம்ப காலத்தில் யோகி பாபு லொள்ளு சபாவில் வேலை செய்துக்கொண்டிருக்கும் போது அவரை நடிக்க சொல்ல இயக்குநர் ராம் பாலா, அவன் வேண்டாம் அவனுக்கு நடிக்க வரல, டைலாக் வரல, எக்ஸ்பிரஷன் வரல என்று திட்டி திட்டி அவமானப்படுத்தியுள்ளார். ஆனால், தற்போது அவர் இயக்கிய சில படங்களிலேயே யோகி பாபுவை நடிக்க வைத்துள்ளார். மேலும், இன்றைக்கு யோகி பாபு கால்ஷீட் கிடைக்காமல் பல இயக்குநர்கள் தவம் கிடந்து வருகின்றனர் என லொள்ளு சபா எஸ்தர் கூறியுள்ளார்.