More
Categories: Cinema History Cinema News latest news

முதல் மனைவி பிரவீனா மீது பாக்கியராஜுக்கு காதல் எப்படி வந்தது தெரியுமா?!. ஒரு சுவாரஸ்ய தகவல்…

திரையுலகில் திரைக்கதை மன்னனாக வலம் வந்தவர் பாக்கியராஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பல படங்களில் வேலை செய்தார். அதன்பின் அவராலேயே ஹீரோவாகவும் அறிமுகம் செய்யப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரே கதை எழுதி இயக்கி நடிக்க துவங்கினார். தூரல் நின்னு போச்சு, அந்த ஏழு நாட்கள், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சி என பல பாக்கியராஜ் இயக்கிய பல திரைப்படங்கள் வசூலை வாரி குவித்தது. குறிப்பாக பாக்கியராஜுக்கு பெண் ரசிகைகள் உருவானார்கள்.

bhagyaraj

பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அது அவருக்கு இரண்டாவது திருமணம்தான். முதலில் நடிகர் பிரவீனாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

Advertising
Advertising

மன்மத லீலை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரவீனா. பல திரைப்படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக வாய்ப்பு தேட, பாக்கியராஜ் இயக்குனராக வாய்ப்பு தேடினார். சில படங்களில் பிரவீணா சிபாரிசில் சின்ன சின்ன வேடங்களில் பாக்கியராஜ் நடித்துள்ளார். அதோடு, பாக்கியராஜுக்கு முதல் படம் இயக்கவே பிரவீணாதான் காரணமாக இருந்துள்ளார்.

பிரவீனா கேரளாவை சேர்ந்தவர். எனவே, அவருக்கு தமிழ் தெரியாது. அவருக்கு தமிழ் சொல்லி கொடுக்க சென்றவர்தான் பாக்கியராஜ். அப்போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 1981ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 1983ம் வருடமே பிரவீனா மரணமடைந்தார். அதன் பின்னர்தான் நடிகை பூர்ணிமாவை பாக்கியராஜ் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளையராஜா மட்டம் என்றால் இவர் மட்டும் ஒழுங்கா? – ஜேம்ஸ் வசந்தனுக்கு பதிலடி கொடுத்த பத்திரிக்கையாளர்..

Published by
சிவா

Recent Posts