எங்க அம்மா தினம் சாப்பாடு போட்டுட்டு அழுவாங்க!.. அதையெல்லாம் தாண்டி வரணும்.. மணிகண்டன் சொன்ன மேட்டர்!

காலா, விக்ரம் வேதா, சில்லுக்கருப்பட்டி, ஜெய்பீம், குட் நைட் படங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தமிழ் சினிமாவின் அடுத்த விஜய்சேதுபதி போல மாறி வருகிறார் நடிகர் மணிகண்டன். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அதன் பின்னர் சினிமாவில் டப்பிங் கலைஞராக வாய்ப்புக் கிடைத்த நிலையில், ரொம்பவே கம்மியாஅ சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார்.

சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள் முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இருப்பதிலேயே அதுதான் டஃப்பான வேலையே.

இதையும் படிங்க: வேட்டையன் நடிகைக்கு ஜிம்மில் ஹெல்ப் பண்றது யாருன்னு பாருங்க!.. இவங்களும் லாஸ்லியா போல மாறிட்டாங்களே!

என் அம்மா தினமும் சாப்பாடு போட்டு விட்டு அழுவாங்க, அந்த பக்கத்து வீட்டுப் பையன்லாம் 30 ஆயிரம் சம்பாதிக்கிறான்னு சொல்வாங்க, அதையெல்லாம் கேட்டு விட்டால், நாம எப்போ 30 ஆயிரம் சம்பாதிப்போம் என்கிற சிந்தனையில் முடங்கி விடுவோம்.

நமக்கானதை தேடி நாம் அலைய மாட்டோம். அதற்காக தொடர்ந்து முயற்சித்தால், விடாமல் போராடினால் நிச்சயம் பெரிய விஷயம் கிடைக்கும் என மணிகண்டன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷுடன் நேரடியாக மோதிய சிவகார்த்திகேயனின் 16 படங்கள்!.. ஜெயிச்சது யார் தெரியுமா?..

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான குட் நைட் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த வாரம் லால் சலாம் படத்துக்கு போட்டியாக லவ்வர் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்திருந்தார்.

 

Related Articles

Next Story