தக்க சமயத்தில் உதவியவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்!. ஒரு ஆச்சர்ய தகவல்..

நடிகராக வாழ்க்கையை துவங்கி, அரசியலில் கால்வைத்து வீழ்த்த முடியாத தலைவராக வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். அடிமைத்தனத்தை வேரறுக்கும் கதைகளை மையமாக வைத்து படங்களின் கதைகளை தேர்வுசெய்து நடித்து வந்தும் இருந்திருக்கிறார்.

தனது வாழ்நாளின் துவக்கத்தில் மிகுந்த வறுமையில்  அனுபவித்த எம்.ஜி.ஆர் திரையில் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக மாறினார். தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வாழ்விலும் பல சறுக்கல்களை சந்தித்திருந்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை தேர்வு செய்து அதில் பயணித்து வெற்றி மேல் வெற்றியை குவித்தார்.

தியேட்டர் உரிமையாளரான எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ‘மாயவரம்’ குருநாத செட்டியார் தனது திரையரங்கில் எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே திரையிடுவது என்ற கொள்கையோடு வாழ்ந்து வந்தவர். இதர நடிகரின் படங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை காட்டிலும் எம்.ஜி.ஆருக்கே அங்கு முன்னுரிமை. எம்.ஜி.ஆர் மீது அந்த அளவு அன்பும், பக்தியும் கொண்டிருந்தவர் குருநாத செட்டியார்.

தனி மனிதனாக தனது முதல் தேர்தலை சந்தித்த எம்.ஜி.ஆர். அப்பொழுது செலவுக்கு பணமில்லாமல் பரிதவித்து வந்திருக்கிறார். திடீரென குருநாத செட்டியார் நினைவுக்கு வர அவரிடம் சென்று ஐந்து லட்சம் ரூபாயை கேட்டிருந்தாராம். வாரி வழங்கிய வள்ளல் தன்னிடம் வந்து கேட்டுவிட்டாரே என நெகிழ்ந்து எதையும் பற்றி யோசிக்காமல் அவர் கேட்ட தொகையை கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

mgr

அந்த தொகை செலவழிந்து போக கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் தேவை என எம்.ஜி.ஆர் கேட்டுமிருக்கிறார். அதனையும் உடனடியாக வழங்கியிருக்கிறார் குருநாத செட்டியார். செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றி செல்வராக வலம் வந்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் களமும் மகுடம் சூட்டியது. பதவி ஏற்ற பின் திரையரங்கு உரிமையாளரின் இல்லம் தேடி சந்திக்கிறார் அவர்.

தனக்கு உதவியாக வழங்கப்பட்ட ஏழு லட்ச ரூபாயோடு சென்றவர், அதனை கொடுத்துமிருக்கிறார். அதை பெற மறுத்த குருநாதரோ ‘இது நான் மூட்டை தூக்கி சம்பாதித பணம் அல்ல. உங்கள் படத்தை எனது தியேட்டரில் திரையிட்டு அதன் மூலம் வந்த லாபம் தான் இது உங்களுக்கே சொந்தமானது’ என பெருந்தன்மையோடு சொல்லியும் இருக்கிறார்.

ஆனால் செய்நன்றி மறவாத எம்.ஜி.ஆரோ தனது சொந்த படங்களான “அடிமைப்பெண்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “நாடோடி மன்னன்” அகியவற்றை வாழ் நாள் முழுவதும் திரையிடும் உரிமையை கைமாறாக வழங்கினார் . வாரி வழங்கும் வள்ளல் என மக்கள் அவரை போற்றுவது பொய்யல்ல என்பதனை நிரூபிக்கும் விதமாகவே இது அமைந்ததாகவே பார்க்கப்படுகிறது.

 

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

2 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

2 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

9 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

10 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

12 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago