More
Read more!
Categories: Cinema News latest news

மலையாள நடிகையை ஷூட்டிங்கில் அடித்த இயக்குனர் பாலா… என்னங்கையா இன்னுமா நீங்க மாறல?

Bala: இயக்குனர் பாலாவின் படங்களில் நடிக்க ஆசைப்படும் நடிகர்களுக்கு இருக்கும் பயமே அவரின் முரட்டுத்தனமான இயக்கம் தான். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பாலா தன்னை அடித்தார் என மீண்டும் ஒரு மலையாள நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

முரட்டுத்தனமான படங்களை எடுப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய நடிகர் நடிகைகளிடம் முரட்டுத்தனமாக நடக்கும் இயக்குனர் என்றால் அது பாலா தான். அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களிடம் கேட்டால் அடி வாங்கினோம் உண்மைதான் என்பதை ஓபனாக ஒப்புக்கொள்வார்கள்.

இதையும் படிங்க: தனுஷ் நடிக்கும் படத்தில் கமல், ரஜினி, சிம்பு? இதெல்லாம் வெறும் கனவா இல்லை நனவா?..

அப்படி ஒரு விஷயம் பாலாவின் வணங்கான் திரைப்படத்திலும் நடந்திருக்கிறது.  முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் சூர்யா. அவரை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் ரிலீஸான நிலையில் திடீரென அவர் படத்தில் இருந்து விலகினார். அதற்கு காரணமாக  படக்குழுவை பாலா மரியாதை இல்லாமல் நடத்துவதாக கூறினார்.

சூர்யாவை தொடர்ந்து அப்படத்தில் நடித்த நடிகை மமீதா பைஜீவும் விலகினார். தற்போதைய இவர் நடிப்பில் வெளியான பிரேமலு திரைப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமாக மாறி இருக்கிறது. அதன் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மமீதா வணங்கானில் இருந்து வெளியேறிய காரணத்தினை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: பாடகினு தெரியும்.. இந்த ஐட்டம் சாங்க பாடுனது இவங்களா? ஸ்ரீவித்யா பாடி ஹிட் அடித்த அந்த பாடல்

ஒரு காட்சியில் வில்லடிச்சான் பாட்டில் நான் நடிக்க வேண்டும். ஆனால் எனக்கு சரியாக வரவில்லை. இதனால் மூன்று டேக்குகள் சென்றது. அதனால் சில சமயம் இயக்குனர் பாலா என் பின்னால் இருந்து முதுகில் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் படப்பிடிப்பு சமயத்தில் தான் கோபமானால் அதை படப்பிடிப்பு முடிந்ததும் மறந்துவிட வேண்டும் எனவும் பாலா கூறியதாக மமீதா தெரிவித்தார்.

ஏற்கனவே இயக்குனர் பாலாவுடன் இணைந்து பணியாற்றி இருந்ததால் படப்பிடிப்பில் எப்படி இருப்பார் என்பதை சூர்யா சார் தெரிந்து வைத்து இருந்தார். நான் தான் அந்த செட்டுக்கு புதிது எனவும் தெரிவித்து இருக்கிறார். பல வருடம் கழித்து மீண்டும் இப்படி குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

Published by
Akhilan

Recent Posts