14 வருடத்துக்கு பின்னர் கோலிவுட்டில் நடிக்க வரும் மல்லுவுட் பிரபலம்.. எஸ்கேவால் செம விஷயம் நடந்து இருக்கே?

Published on: April 26, 2024
---Advertisement---

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்கள் தொடர்ச்சியாக லீக்காகி வரும் நிலையில், மல்லுவுட்டில் இருந்து பல வருடங்களுக்கு பிறகு முன்னணி பிரபலம் கோலிவுட்டுக்குள் வந்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக ருக்மணி வசந்தா நடித்து வருகிறார். இன்னொரு நாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முத்துவால் ரோகிணியிடம் சிக்கிய ஜீவா!.. காசை கேட்டு சண்டைக்கு நிற்கும் மனோஜ்…

150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் வில்லனாக வித்யூத் ஜமால் நடிக்க இருக்கிறார். இன்னும் இப்படத்துக்கு டைட்டில் வைக்கப்படாத நிலையில் தற்போது சுவாரஸ்ய தகவல் ஒன்றும் கசிந்துள்ளது. மலையாள ஹிட் நாயகனான பிஜூ மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

 மஜா, தம்பி, பழனி, அரசாங்கம் படங்களில் ஏற்கனவே பிஜூ மேனன் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் 2010 ஆண்டு பொற்காலம் படத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட 14 வருடம் கழித்து தமிழுக்கு பிஜூ மேனன் வருவது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: நாசுக்காக ராதிகா கர்ப்பத்தை லீக் செய்ய பார்த்த கோபி… செம பல்ப் கொடுத்த செழியன்…

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.