More
Categories: Cinema News latest news

பிரேமலு ஹீரோயினை துன்புறுத்தினாரா பாலா?.. கிளம்பிய சர்ச்சை!.. மமிதா பைஜு என்ன சொன்னாங்க தெரியுமா?..

வணங்கான் படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சூர்யா விலகிய நிலையில், தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி மற்றும் மலையாள நடிகையான மமிதா பைஜு இருவரும் சேர்ந்தே விலகி இருக்கின்றனர்.

அதன் பின்னர் அருண் விஜய்யை வைத்து பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அந்த படத்தில் ரோஷினி மற்றும் இன்னொரு நடிகையும் நடித்திருக்கிறார். சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பையும் கொடுத்திருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: வ்ரூம்.. வ்ரூம்!.. நானும் அஜித் போல ஒரு வேர்ல்ட் டூர் போயிட்டு வரேன்!.. பைக் எடுத்த ரஜினிகாந்த்!..

இந்நிலையில், திடீரென மீண்டும் வணங்கான் படத்துக்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் சமீபத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு அளித்த பேட்டி பெரும் பஞ்சாயத்தை கூட்டியது. இயக்குநர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியாக நடிக்கவில்லை என்றால் தன்னை பின்னாடி இருந்து அடிப்பார் என பேசியிருந்தார்.

அந்த பிரச்சனை பெரிதான நிலையில், தற்போது செய்தி சேனல் ஒன்று மமிதா பைஜுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளது. அதில், பேசிய மமிதா பைஜு பாலா சார் தன்னை துன்புறுத்தவில்லை என்றும் ஒரு வருடம் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். நான் பேசிய பெரிய பேட்டியில் ஒரு சின்ன பிட்டை மட்டும் கட் பண்ணி தப்பா புரமோட் பண்ணிட்டாங்க, அந்த விஷயத்தை நான் முழுமையா மறுக்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் இடத்தை ராஷ்மிகா மந்தனா பிடிச்சிடுவாரு போல!.. இனிமே அவர் நேஷ்னல் கிரஷ் இல்லை!..

பின்னர் ஏன் அந்த படத்தில் இருந்து விலகுனீங்க எனக் கேட்டதற்கு சூர்யா சார் படத்தில் இருந்து விலகிய நிலையில், மேலும், 6 மாதம் கால தாமதம் எடுக்கும் படம் புதிதாக உருவாக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள்.

மலையாளத்தில் எனக்கு இன்னொரு படத்தின் கமிட்மென்ட் இருந்ததால் தான் வெளியேறி விட்டேன் என்று கூறியுள்ளார்.

Published by
Saranya M

Recent Posts