சிவாஜி குடும்பத்துக்கு தோல்வி!.. அஜித் கொஞ்சம் கூட நன்றி இல்லாதவன்!.. கொந்தளிக்கும் பிரபலம்..

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் வரைதான் கையை கட்டி நிற்பார்கள். ஒரு இடத்தை பிடிக்கும் வரை அடக்கி வாசிப்பார்கள். நன்றியுடன் இருப்பார்கள். அல்லது இருப்பது போல நடிப்பார்கள். அதுவே ஒரு இடத்தை பிடித்து பிரபலமாகிவிட்டால் அவர்களின் நடவடிக்கையே மாறிவிடும். தன்னை யாரெல்லாம் வளர்த்திவிட்டார்களோ அவர்களையே மறந்துவிடுவார்கள்.

அவர்களோடு பேசுவதையும், சந்திப்பதையும் கூட தவிர்த்துவிடுவார்கள். இதற்கு உதாரணமாக பல நடிகர்களை சொன்னாலும் இதில் வடிவேலு முக்கியமானவர். தன்னை சென்னை அழைத்து வந்து தனது அலுவலகத்தில் தங்க வைத்து படத்தில் நடிக்க வாய்ப்பு தூக்கிவிட்ட ராஜ்கிரணை வளர்ந்தபின் மதிக்காமல் இருந்தவர்தான் வடிவேலு.

இதையும் படிங்க: சொல்லி அடித்த விஜயகாந்த்!.. தோல்வியை சந்தித்த விஜய பிரபாகரன்!.. சோகத்தில் ரசிகர்கள்…

அவ்வளவு ஏன்?.. சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்தை பின்னாளில் எப்படியெல்லாம் வடிவேல் திட்டினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருபக்கம், ஒரு படத்தில் ஒரு ஹீரோ நடித்து அப்படம் தோல்வி அடைந்தால் அதே தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள். ரஜினி மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

அமராவதி படம் மூலம் அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த சோழா பொன்னுரங்கத்திற்கு அதன்பின் கால்ஷீட் கொடுக்கவே இல்லை அஜித். அவர் பலமுறை அஜித்தை சந்திக்க முயன்றும் கூட அது நடக்கவில்லை. அப்படி பல தயாரிப்பாளர்களை கைவிட்டிருக்கிறார் அஜித்.

manickam

manickam

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சொந்தமாக ‘சிவாஜி பிலிம்ஸ்’ என்கிற நிறுவனம் இருக்கிறது. சிவாஜியின் மறைவுக்கு பின் மன்னன் உள்ளிட்ட சில படங்களை அவர்கள் தயாரித்துள்ளனர். அப்படி அஜித்தை வைத்து எடுத்த படம்தான் ‘அசல்’. இப்படத்தை சரண் இயக்கி இருந்தார். ஆனால், இப்படம் தோல்வி.

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ‘அசல் படத்தால் பிரபுவுக்கு பல கோடிகள் நஷ்டம். சிவாஜி நிறுவனம் நிதிநெருக்கடியில் இருந்தபோது ரஜினி அவர்களை அழைத்து சந்திரமுகி படத்தை தயாரிக்க சொல்லி வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அசல் படம் தோல்வி அடைந்தபின் அஜித் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. அந்த நல்ல மனசு அஜித்துக்கு எப்போதும் இல்லை. அவன் நன்றி இல்லாதவன்’ என கோபமாக பேசினார். இவர்தான் ‘அஜித் என்னிடம் பணம் வாங்கிவிட்டு திருப்பி தரவே இல்லை’ என சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story