ரோஜா திரைப்படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் மணிரத்தினம். இளையராஜாவிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தொடர்ந்து புதிய இசையமைப்பாளரை தேடிய போது அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கிடைத்தார். அதன்பின் கடந்த 34 வருடங்களாகவே மணிரத்னம் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்தார். மணிரத்னம் – ரஹ்மான் கூட்டணி என்றேலே பாடல்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கும்.
இந்த கூட்டணியில் என்னவானது என்று தெரியவில்லை. மணிரத்தினம் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் சாய் அபயங்கரை இசையமைக்க வைக்கலாமா என்கிற யோசனை வந்திருக்கிறதாம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
ஆனால், இதுதான் இறுதியான உறுதியான முடிவா என்பது தெரியவில்லை. ஏனெனில் ஏ.ஆர்.ரகுமான் ரோஜா படத்தில் இசையமைத்தது முதலே தன்னை அறிமுகப்படுத்தியவர் என்பதால் மணிரத்னத்திடம் சம்பளம் பேச மாட்டாராம்.. மணிரத்தினம் என்ன கொடுப்பாரோ அதை வாங்கிக் கொள்வாராம். அப்படிப்பட்ட ஒருவரை விட்டு விட்டு சாய் அபயங்கர் பக்கம் மணிரத்னம் செல்வாரா என்பது தெரியவில்லை.. அப்படி நடந்தால் ரஹ்மான் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக முடியும் என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…