தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது புன்னகை மாறா முகத்துடன் கலந்துகொள்பவர் இவர்.
கேரளாவைச் சேர்ந்த மஞ்சு வாரியர் 1995-ஆம் ஆண்டு சாக்ஷ்யம் என்ற படத்தின் மூலம் மலையாள படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ‘சல்லாபம்’, ‘ஈ புழையும் கடன்னு’, ‘ஆறாம் தம்புரான்’, ‘கண்மடம்’, ‘பத்ரம்’ என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் பெற்றார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு வெளியான ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய அதன் பிறகு ‘லூசிபர்’, ‘அசுரன்’, ‘பிரதி பூவன்கோழி’ என அழுத்தமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் அசுரன், ரஜினியுடன் வேட்டையன், அஜித்துடன் துணிவு என சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டமஞ்சுவாரியாருக்கு மேடைக்கு வந்த ரசிகை ஒருவர் அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் மஞ்சு வாரியர். நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருக்கும்போது , கூட்டத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர் திடீரென மேடையை நோக்கி ஓடி வந்தார். மேடையில் நின்றுகொண்டிருந்த மஞ்சு வாரியரை ஆசையாகக் கட்டியணைத்த அந்த ரசிகை, யாரும் எதிர்பாராத விதமாக அவரது உதட்டில் பசக் என முத்தம் கொடுத்தார்.
இந்த திடீர் சம்பவத்தை எதிர்பார்க்காத மஞ்சு வாரியர் சற்று திகைத்து நின்றாலும், முகத்தில் எதையும் காட்டாமல் லேசாகப் புன்னகைத்தார். ஆனால், மேடையில் இருந்தவர்களும், பாதுகாவலர்களும் பதறியடித்துக் கொண்டு உடனடியாக அந்த ரசிகையை மேடையில் இருந்து கீழே இறக்கி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரசிகையின் எல்லையற்ற அன்பு இது என்றும் கமெண்ட்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…