More
Categories: Cinema News latest news

குருவை பார்த்துட்டு சிஷ்யனை பார்க்காமல் விட்டா எப்படி!.. மஞ்சுமெல் பாய்ஸ் என்ன இங்கேயே டேராவா?..

மஞ்சுமெல் பாய்ஸ் படம் 200 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை அந்த படம் ஈட்டியது. ஆனால், இன்னமும் சென்னையை விட்டு அந்த படக்குழுவினர் செல்லவில்லையா? என்கிற கேள்வியை பலரும் எழுப்பி உள்ளனர். அதற்கு காரணம் நேற்று இயக்குநர் சிதம்பரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்களும் நடிகர் சிம்புவை சந்தித்தது தான்.

குணா படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ் படம் உருவாக காரணம். அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் “கண்மணி அன்போடு காதலன்” பாடலை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவழைத்து இருந்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இதுதான் ரியல் சில்லாக்ஸ்!.. நீச்சல் குளத்தில் இருந்து ஹன்சிகா எப்படி எழுந்து வராரு பாருங்க!..

படத்தின் ஆரம்பத்தில் கொடைக்கானலுக்கு போகும் போதே குணா படத்தின் சிடியை வாங்கிக் கொண்டு செல்வதில் இருந்து பல விஷயங்களை இயக்குநர் படத்தில் வைத்திருப்பார். மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை குவிக்கத் தொடங்கியதும் சென்னைக்கு வந்து கமல்ஹாசன் மற்றும் குணா படத்தை இயக்கிய சந்தான பாரதி உள்ளிட்டோரை சந்தித்து சென்றனர். மேலும், சிம்பு, சியான் விக்ரம் உள்ளிட்ட நடிகர்களையும் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தனர்.

இந்நிலையில், குருநாதரை சந்தித்து விட்டு அவரது சிஷ்யன் சிம்புவை சந்திக்கவில்லை என்றால் எப்படி என்கிற நிலையில், சிம்பு அழைத்ததும் அவரை தனது பாய்ஸ் டீமுடன் வந்து நேற்று சந்தித்து இருக்கிறார் சிதம்பரம். அதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கூடிய சீக்கிரமே தனுஷ் அல்லது சிம்புவை வைத்து சிதம்பரம் படம் இயக்குவார் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க: சம்பளமே வாங்காமல் பாக்கியராஜ் நடித்த படம் இதுதான்!.. இதுக்கு யார் காரணம்னு தெரியுமா?..

Published by
Saranya M

Recent Posts