Ajith: ஆதிக் சொன்னததான் நானும் சொல்றேன்.. ‘மங்காத்தா 2’ பற்றி வாய் திறந்த வெங்கட் பிரபு

by Rohini |   ( Updated:2025-04-13 02:40:37  )
mankatha
X

mankatha

Ajith: கடந்த 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது குட் பேட் அக்லி திரைப்படம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில், பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

படம் ரிலீஸான முதல் நாளே 30 கோடி வசூலை அள்ளியது. படம் முழுக்க அஜித் படத்தின் ரெஃபரன்ஸ் இருந்தாலும் இதைத்தான் ரசிகர்களும் விரும்புகின்றனர். பில்லா, மங்காத்தா படங்களுக்கு பிறகு இப்படித்தான் அஜித்தை பார்க்க ஆசைப்பட்டோம் என படம் பார்த்த அனைவரும் கூறி வருகிறார்கள். எல்லாரும் சொல்வதை போல் குட் பேட் அக்லி படத்தில் கதைனு ஒன்னுமில்லை. ஆனால் ரசிகர்களை கவரும் விதமாக சில விஷயங்கள் படத்தில் இருக்கின்றன.

படத்தில் விண்டேஜ் பாடல் என ஐந்து பாடலை வைத்திருக்கிறார் ஆதிக். அதுவும் அர்ஜூன் தாஸின் அறிமுக பாடலான ஒத்த ரூபா தர்றேன் பாடல் இன்றுவரை ரசிகர்களிடம் வைப் பண்ணிக் கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் இப்போது வரும் பாடல்களை விட ஏற்கனவே ஹிட்டான பழைய பாடல்களை இந்த காலகட்டத்திற்கு ஏற்ப படத்தில் புகுத்துவது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் வெங்கட் பிரபு மற்று பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக் கொண்டனர். அப்போது வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு ‘எனக்கும் தெரியவில்லை. ஆனால் எனக்கும் ஆசை இருக்கிறது. அஜித் சாருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் எப்போது நடக்கும் என தெரியவில்லை.’

‘எல்லாரும் போல நானும் வெயிட்டிங். ஆனால் ஆதிக் சொன்னதை போல் எந்தவொரு ஹீரோவும் நம்பிக்கை வைக்காத சமயத்தில் அஜித் சார் தான் நம்பிக்கை வைத்தார் என ஆதிக் சொன்னார். அதை போல்தான் எனக்கும் . சென்னை 28, கோவா படங்களுக்கு பிறகு எந்த படங்கள் வாய்ப்பும் எனக்கு வரவில்லை. அப்போது என்னை நம்பி கால்ஷீட் கொடுத்தவர் அஜித் சார் தான்.’ என வெங்கட் பிரபு கூறினார்.

Next Story