ஸ்ரீதர் கேட்ட ஒரே ஒரு கேள்வி! ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரிமேக் செய்யும் எண்ணத்தை விட்ட மனோபாலா

Kadhalikka Neramillai Movie: பழம்பெரும் நகைச்சுவை காதல் கலந்த காவியப் படைப்பாக அமைந்த படங்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த காதலிக்க நேரமில்லை திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் தான் ரவிச்சந்திரன் ஹீரோவாக அறிமுகமானார்.

அவரோடு முத்துராமன், பாலையா, நாகேஷ் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக அன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் அமைந்தது.

இதையும் படிங்க: சிவாஜிக்கு பிறகு கார்த்திக்குத்தான் அந்த அங்கீகாரம் கிடைச்சது! ‘பருத்திவீரன்’ குறித்து பேரரசு சொன்ன சீக்ரெட்

இளசுகள் கொண்டாடிய திரைப்படமாக அமைந்த இந்த படத்தை ரீமேக் செய்ய நினைத்தாராம் இயக்குனர் மனோபாலா. அதை ஸ்ரீதரிடமே போய் கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்ரீதர் அந்தப் படத்தில் கதாநாயகர்களாக நடிக்க இன்றைய கால ஹீரோக்கள் யார் இருக்கிறார் என்று கேட்டாராம்.

அதற்கு மனோபாலா அந்த காலகட்டத்தில் இருந்த பல முன்னணி ஹீரோக்களின் பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறார். உடனே ஸ்ரீதர் நான் கதா நாயகர் என சொன்னது முத்துராமனையோ ரவிச்சந்திரனையோ இல்லை. பாலையா மற்றும் நாகேஷ் இவர்களின் கதாபாத்திரங்களைத்தான் சொன்னேன் என்று கூறினாராம்.

இதையும் படிங்க: ஜக்குபாய் வராமல் போனதற்கு இதுதான் காரணம்!.. பல வருடங்கள் கழித்து வெளியான சீக்ரெட்…

அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்க இப்ப உள்ள நடிகர்கள் யார் இருக்கிறார் என்று ஸ்ரீதர் கேட்க அதோடு அந்தப் படத்தை ரிமேக் செய்யும் எண்ணத்தையே விட்டுவிட்டாராம் மனோபாலா. இந்த செய்தியிலும் ஒரு உண்மை இருக்கின்றது.

அந்தப் படத்தில் ரவிச்சந்திரன் மற்றும் முத்துராமன் இவர்களையும் தாண்டி தன்னுடைய அபார நடிப்பால் படத்தையே வேறொரு களத்திற்கு கொண்டு சென்றவர்கள் பாலையாவும் நாகேஷும் தான். அவர்கள் இணைந்து கொடுத்த அந்த நகைச்சுவை காட்சிகளை யாராலும் மறக்க முடியுமா?

இதையும் படிங்க: பொறக்கும் போதே சலங்கை கட்டி பொறந்தவங்க! அவங்களோட ஆடுறதா? எம்ஜிஆர் சொன்ன நடிகை யாரு தெரியுமா?

இல்லை. அவர்களைப் போலத்தான் நடிக்க முடியுமா? அதனால்தான் ஸ்ரீதர் அந்தப் படத்தை பொறுத்தவரை அதை மீண்டும் ரீமேக் செய்யாமல் இருப்பதே நல்லது என்று சொல்லாமல் சொல்லிக் காட்டியிருக்கிறார். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.

 

Related Articles

Next Story