Connect with us

Cinema News

திரிஷா பிரச்சனையில் தலையை விட்ட மன்சூர் அலி கான்!.. அவசர அவசரமா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

நடிகை திரிஷாவுக்கும் தனக்கும் பலான காட்சியை லோகேஷ் கனகராஜ் லியோவில் வைக்காமல் ஏமாற்றி விட்டார். அந்த காலத்துல ரோஜா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகளை அப்படியே அலாக்கா தூக்கி கட்டிலில் போட்டு கபடி ஆடியிருப்பேன் என்பது போல மன்சூர் அலி கான் பேச, உடனடியாக அதற்கு திரிஷா மன்சூர் அலி கானை கண்டபடி திட்டி விளாசி விட்டார்.

மன்சூர் அலி கானுக்கு எதிராக திரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், சினிமா பிரபலங்கள் நடிகைகள் என பலரும் வரிசை கட்டி திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மன்சூர் அலி கான் மன்னிப்புக் கேட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், திரிஷா மன்னித்து விடுவதாக கூறினார். அதன் பின்னர் மீண்டும் திரிஷா மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டார் மன்சூர் அலி கான்.

இதையும் படிங்க: உன் சைனிங் கன்னம் எங்க மனச கெடுக்குது!.. லைக்ஸ் போட வைக்கும் கோட் பட நடிகை…

இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏவி ராஜு நடிகை திரிஷா கூவத்தூர் ரெசார்ட்டுக்கு வர 25 லட்சம் கேட்டார் என பேசி பகீர் கிளப்பினார். மேலும், கருணாஸ் தான் பல நடிகைகளை கூவத்தூருக்கு அழைத்து வந்தார் என்று கூறியது சர்ச்சையாக வெடித்தது.

நடிகை திரிஷா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜுவின் பெயரை குறிப்பிடாமல் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். மேலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: மாஸ்டர் படமே காப்பிதான்!. எல்.சி.யூன்னா இதுதான்!. லோகேஷை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..

உடனடியாக பயந்த ஏ.வி. ராஜு திரிஷா மாதிரின்னு சொன்னேன் திரிஷான்னு சொல்லல என பல்டி அடித்து விட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மன்சூர் அலி கான் வாயை திறந்து என்ன பூதத்தை கிளப்பப் போகிறாரோ என பயந்த ரசிகர்களுக்கு தற்போது மன்சூர் அலி கான் தங்கை திரிஷாவுக்கு என் முழு ஆதரவு இருக்கும் என்றும் அரசியல்வாதி என்கிற பெயரில் சுற்றி வரும் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top