இதுக்குத்தான் 'வாழை'ய விழுந்து, விழுந்து பாராட்டினீங்களா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியான இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

இதனால் முதல் வாரத்தினை விடவும் 2-வது வாரத்தில் இப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 30.50 கோடிகளை வாழை ஈட்டி இருக்கிறது.

சமீபத்தில் படத்தினை பார்த்த ரஜினிகாந்த் படம் நன்றாக இருப்பதாக பாராட்டி இருந்தார். அதன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாராம்.

தற்போது வேட்டையன், கூலி படங்களில் ரஜினி நடித்து வருகிறார். பான் இந்தியா படங்களாக இவை இரண்டும் உருவாகி வருகின்றன. இந்த படங்களை அடுத்து ரஜினி-மாரி இருவரும் இணையலாம் என தெரிகிறது.

துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் படத்தினை மாரி தற்போது இயக்கி வருகிறார். இப்படம் உண்மை சம்பவத்தினை தழுவி உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

manju
manju  
Related Articles
Next Story
Share it