எனக்கு என்னமோ ஆகப்போகுது!.. கெட்டது நடக்கபோகுது!.. அப்போதே கணித்த மாரிமுத்து!.. வீடியோ பாருங்க....

இன்று காலை எல்லோருக்கும் அதிர்ச்சியான காலையாக மாற்றியது மாரிமுத்துவின் மரண செய்திதான். கடந்த சில மாதங்களாகவே சமூகவலைத்தளங்களில் அவரின் புகைப்படங்களையும், அவர் பற்றிய செய்திகளையும் அதிகம் பார்க்க முடிந்தது. பல யுடியூப் சேனல்களிலும் பேட்டி கொடுத்து வந்தார்.

கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் மாரிமுத்து சமீபமாகத்தான் அவர் பிரபலமானார். அதுவும் திடீரென அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய நெகட்டிவ் பப்ளிசிட்டியே அவருக்கு பாஸிட்டிவாக மாறியது.

இதையும் படிங்க: இடுப்புக்கு மேல பிரச்னை… ஜோதிடர் சொன்னது பழித்ததா… மாரிமுத்து மறைவால் அதிர்ச்சியில் திரையுலகம்!

பரியேரும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். கண்ணு கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். மணிரத்னம், வஸந்த், சீமான் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இப்போது எதிர் நீச்சல் சீர்யல் மூலம் சின்னத்திரை வட்டாரத்திலும், சீரியல் ரசிகர்களிடமும் பிரபலமானார். இன்று காலை சீரியலுக்கு டப்பிங் பேச சென்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மனைவிக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவராகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு டிக்கெட்டுக்கு 23 படம் காட்டுறாரு!. ஏன் அட்லியை திட்றீங்க!?.. ட்ரோல் ஆகும் வைரல் வீடியோ!..

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் அங்கேயே மரணமடைந்துவிட்டார். அவரின் மரண செய்தி ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏராளமான சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவர் நடிக்கும் சீரியலுக்கான ஒரு காட்சியில் ‘எனக்கு என்னமோ பண்ணுது.. நெஞ்சுவலி அடிக்கடி வந்து எனக்கு ஏதோ எச்சரிக்கை பண்ணுது.. ஏதோ கெட்டது நடக்க போகுது’ என அவர் பேசும் வீடியோவை சிலர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

 

Related Articles

Next Story