Selfstart Productions நிறுவனம் சார்பில், கே ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கு படம் மாயபிம்பம்.சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு தவறான புரிதல் எவ்வாறு பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதுதான் இப்படத்தின் மையக்கரு. ஆகாஷ், மருத்துவக் கல்லூரி மாணவர். ஜானகி, மருத்துவ மனை ஒன்றில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால், அதை ஆகாஷ் மற்றும் ஜானகி வேறு வேறு ஒரு கோணத்திலும் பார்க்கின்றனர். ஆகாஷ் சொல்லும் ஒரு பொய்யினால் ஏற்படு பிரச்சனையே மாயபிம்பம் படத்தின் கதை.
நாயகியாக நடித்திருக்கும் ஜனகி முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கிறார். நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருப்பதால் எளிதில் மனதில் ஒட்டிக்கொள்கிறார். நாய்கனாக நடித்திருக்கும் ஆகாஷ் தனது நடிப்பில் குறை வைக்கவில்லை. நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.
நந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. காதல் கதையாக இருந்தாலும், அதை புதிய கண்ணோட்டத்தில் சொல்ல முயன்ற இயக்குனர் அதில் ஓரளவிற்கு வெற்றியும்பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.





