மரண பயத்தை காட்டிட்டான் பரமா! மீசை எடுக்கிறேனு சொன்னது தப்புதான் - டிரெய்லருக்கே இப்படியா?

Meesai Rajendran: தன்னுடைய மிடுக்கான பேச்சாலும் கம்பீரமான உடலாலும் ரசிகர்களை ஒருவகையில் கவர்ந்தவர் நடிகரும் அரசியல் பேச்சாளருமான மீசை ராஜேந்திரன். 90களில் இருந்தே இவர் சினிமாவில் நடிக்க வந்தவர். பெரும்பாலும் இவரின் தோற்றத்திற்கு போலீஸ் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்தார்.

அனேக படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்த மீசை ராஜேந்திரன் சமீபகாலமாக இணையவாசிகளுக்கு தீனி போடும் ஒரு டெம்ப்ளேட்டாகவும் மாறியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை எழுந்ததில் இருந்தே விஜயை தொடர்ந்து வசை பாடுவதையே வழக்கமாக கொண்டு வந்தார்.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. என்ன ஷேப்டா.. இது ஷிவானியா இல்லை மகாபலிபுரத்துல செதுக்கி வச்ச சிலையா?..

ஜெயிலர் பட வெற்றி ஒரு பக்கம் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை தந்தாலும் மீசை ராஜேந்திரன் அதை விஜய்க்கு ஒரு சவாலாக விடுத்தார். ஜெயிலரின் சாதனையை ஒரு போதும் லியோ படம் முறியடிக்காது என்று கூறினார்.

ஒரு வேளை முறியடித்தால் என்னுடைய மீசையையே எடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மீசை ராஜேந்திரன் அப்படியே அந்தர் பல்டி அடித்தார்.

இதையும் படிங்க: காதலால் கேரியரை தொலைத்த த்ரிஷா… ஓரங்கட்டியவர்களையே லைனில் நிற்க வைத்த கம்பேக் பின்னணி..!

அதாவது தன்னுடைய மகன் ஒரு மருத்துவர் என்றும் விஜயின் தீவிர ரசிகன் என்றும் கூறிய மீசை ராஜேந்திரன் நான் விடுத்த சவாலுக்கு அவன் வருந்தினான் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் யாரையும் ஒப்பிட்டு பேசக்கூடாது என்று கூறிவிட்டு நான் அன்று மீசையை எடுக்கிறேன் என்று சொன்னது கூட ஒரு விதத்தில் தப்புதான் என்றும் பல்டி அடித்தார்.

ஆனால் நிச்சயமாக லியோ ஜெயிலரை முறியடிக்காது என்று கூறினார். நேற்று லியோ டிரெய்லர் வெளியான நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் லியோ படம் கண்டிப்பாக 1000 கோடியை நெருங்குவது உறுதி என மாறுதட்டிக் கொண்டு வரும் நிலையில் மீசை ராஜேந்திரனின் இந்த வீடியோவை பகிர்ந்து உருட்டு ராஜா உருட்டு என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 10 வயதிலேயே சொந்த வசனத்தை பேசிய எம்.ஜி.ஆர்!.. நாடகத்தில் மாஸ் காட்டிய பொன்மன செம்மல்…

 

Related Articles

Next Story