கணவரை இழந்த காதல் சொல்ல வந்தேன் பட நடிகை!.. 2வது திருமணம் செய்யப்போறாரா?.. மேக்னா ராஜின் முடிவு என்ன?

நடிகை மேக்னா ராஜ் நடிகர் அர்ஜூனின் தங்கையின் மகனான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து இரண்டு ஆண்டுகளில் மேக்னா ராஜ் கர்பமாக இருக்கும் போது மாரடைப்பால் சிரஞ்சீவி உயிரிழந்தார். அவர் இறந்து 4 வருடங்களாக தன் மகனுடன் வாழ்க்கையை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் மேக்னா ராஜ் இரண்வாது திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக வதந்திகள் வெளியான நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார் மேக்னா.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்த மேக்னா ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் பிரபலமான இவர் உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் படமான பொல்லாதவன், திமிரு உள்ளிட்ட படங்களை கன்னட ரீமேக்கில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
சிரஞ்சீவி சர்ஜாவின் மறைவுக்குப் பிறகு மேக்னா ராஜ் அவர் தன்னுடனே இருப்பதாகவும் , அவரே தன் மகனாக பிறந்திருப்பதாகவும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார். மேலும், தனிமையைப் போக்க கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மேக்னா ராஜ் இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் திடீரென தீயாக பரவின.

இரண்டாவது திருமணம் குறித்து பரவிய கிசுகிசுக்கு பதிலளித்த மேக்னா ராஜ் தன் கணவருடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தனக்கு சிரஞ்சீவி தான் கணவர், தனது வாழ்க்கையில் இனி யாருக்கும் இடமில்லை என்று பதிவிட்டுள்ளார். சிலர் திருமணம் செய்துக்கொள்ள சொல்கிறார்கள், சிலர் குழந்தையை பார்த்துக்கொள் என்கிறார்கள் எதை கேட்பது என எனக்கு புரியவில்லை. இந்த நிமிஷத்தை வாழந்துவிட வேண்டும் என என் கணவர் எப்பொழுதும் கூறுவார். அதனால் நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் என் மகனின் எதிர்காலத்திற்காக வாழ்ந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
இளம் வயதிலேயே நடிகை மேக்னா ராஜ் கணவரை இழந்த நிலையில், மறுமணம் செய்துகொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை என அவருடைய குடும்பத்தினரே வற்புறுத்தி வருவதாகவும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.