More
Categories: Cinema History Cinema News latest news

அசோகனை செல்லமாக அழைத்த எம்.ஜி.ஆர்!… பதறி போய் காலை பிடித்து கதறிய சம்பவம்…

MGR: கோலிவுட்டில் எம்.ஜி.ஆர், சிவாஜி பரபரப்பாக நடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் நிறைய நடிகர்கள் தொடர்ந்து புகழில் இருந்தனர். அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு எம்.ஜி.ஆரே முதல் சாய்ஸாக இருந்தார். அப்படி அசோகன் படத்தில் எம்ஜிஆருடன் ஒரு சுவாரஸ்ய காமெடியே செய்து இருக்கிறார்.

அப்படி அசோகன் தயாரித்த நேற்று இன்று நாளை படத்தில் எம்ஜிஆர் நடித்து வந்தார். பொதுவாக எம்ஜிஆருக்கு ஒரு பழக்கம் இருக்கும். தன்னுடைய தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் அவரை மரியாதையாக பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார். அது தன்னுடைய சக நடிகராக இருந்தாலும் அதையே தொடர்வார்.

இதையும் படிங்க: அஜித் பட ஹீரோயினுக்கும் எனக்கும் லவ்வா? பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

அப்படி தான் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்த போது அசோகன் ஒரு நாள் ஷூட்டிங் வந்து இருக்கிறார். அவரை பார்த்த எம்ஜிஆர் வாங்க முதலாளி வணக்கம் என வரவேற்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்க அசோகன் ஓடிச்சென்று எம்ஜிஆரின் காலை இறுக்கமாக கட்டிக்கொள்கிறார்.

என்னை இனிமே முதலாளி எனக் கூப்பிடக்கூடாது. அப்படி கூப்பிட மாட்டேன் என்று சொன்னால் தான் உங்க காலை விடுவேன் என விடாப்பிடியாக நின்று இருக்கிறார். அவரை தூக்கி கட்டியணைத்து எம்ஜிஆர் அட மக்கு நீ எனக்கு சம்பளம் கொடுக்குற. நான் உன் படத்தில் நடிக்கிறேன். நான் மட்டும் இல்ல இந்த படத்தில் வேலை செய்யும் எல்லாருமே உன்னை முதலாளி என்று தான் கூப்பிட வேண்டும்.

இதையும் படிங்க: மார்க் ஆண்டனி லுக்கில் மாஸ் காட்டுறாரே! புதிய பட போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து கூறிய சந்தானம்

Published by
Akhilan