காக்கா ராதாகிருஷ்ணன் யாருன்னு நம்மில் பலருக்கும் தெரியும். இவர் தான் சிவாஜியையே சினிமாவுக்கு அழைத்து வந்தவர். ஆனால் அவர் எம்ஜிஆரைப் பற்றி என்ன சொல்றாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
தமிழ்சினிமா உலகிலே எப்படிப்பட்ட சாதனையாளர் காக்கா ராதாகிருஷ்ணன் என்பது எல்லாருக்கும் தெரியும். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்து அதில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தார் காக்கா ராதாகிருஷ்ணன். தான் அப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தேன் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ரெண்டு பேர்.
அவங்களைக் குறிப்பிட்டே ஆகணும். அந்த ரெண்டு பேர்ல முதலிடத்தில் இருப்பவர் கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன். என்னுடைய வாழ்க்கையில விளக்கேற்றி வைத்தவர் அவர்தான். அவர் இல்லன்னா சினிமா உலகத்துல நான் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்க வாய்ப்பே இல்லை.
அதே மாதிரி சினிமா உலகத்துல நான் மறக்க முடியாத இன்னொரு நபர் எம்ஜிஆர். தாய் மகளுக்குக் கட்டிய தாலிங்கற படத்துல நான் நடிச்சிக்கிட்டு இருந்தேன். இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு உங்களுக்கு சம்பளம் எவ்வளவுன்னு கேட்டார் எம்ஜிஆர். அதுக்கு மூவாயிரம் ரூபாய் என்றார் காக்கா ராதாகிருஷ்ணன். உடனே தயாரிப்பாளரை அழைத்தார் எம்ஜிஆர். அண்ணனுக்கு இந்தப் படத்துல 5000 ரூபாய் சம்பளம் கொடுங்க.
அதுல 2000 ரூபாய் என் கணக்குல எடுத்துக் கொடுங்க என்றார் எம்ஜிஆர். இந்தப் படத்துல 5000 ரூபாய் சம்பளம் வாங்கியதுக்குப் பிறகுதான் சினிமா உலகிலே என்னுடைய சம்பளமே உயர்ந்தது. அதிகமான சம்பளத்தை எனக்கு வாங்கிக் கொடுத்ததைத் தாண்டி என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர். என்னுடைய குடும்ப நலத்தைப் பற்றியும், என்னிடம் விசாரித்தவர்.
அவருக்கு அடுத்து என்மீது அதிகமான அக்கறைக் காட்டியவர்னா அது கமல்ஹாசன்தான். அவருடன் சேர்ந்து நடித்த தேவர்மகன் படத்தை என்னால மறக்கவே முடியாது. என் வாழ்நாளில் நான் நடித்த மிக முக்கியமான திரைப்படம் அது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் காக்கா ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.





