ஊர் ஊராக அலைந்த பிரபல ஜோடி..! எம்.ஜி.ஆர் கொடுத்த சர்ப்ரைஸ்… இதுக்கு பின்னாடி இப்டி ஒரு கதை இருக்கா?

MGR: எம்.ஜிஆர் சினிமா துறையில் இருந்து வந்தவர் என்பதால் நட்சத்திரங்களுக்கு தன்னால் முடிந்த எல்லா உதவிகளையுமே கேட்கும் போது செய்து விடுவாராம். அப்படி இருக்க ஒரு காதல் ஜோடிக்கு அவர் உதவி திருமணமும் நடந்து இருக்கிறதாம்.

உதவி இயக்குநராக ராமராஜன் இருக்கும் போது நளினி நடிக்க தொடங்கிவிட்டாராம். இருவரும் ஷூட்டிங்கில் இருக்கும் போது நளினி காதலிப்பதாக நினைத்து ராமராஜன் காதலில் விழுந்து விட்டாராம். இப்படி இருக்கையில், இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாகி விட்டனராம்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரே ஆசையாக கேட்டு வாங்கிய அந்த பரிசு..! இதுக்கா இவ்வளவு? சண்டைக்கு நின்ற தயாரிப்பாளர்..!

அதனையடுத்து ராமராஜன் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்க தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இனி பார்க்க முடியாது என்ற சூழலில் வர நளினியிடம் பேச சென்றாராம். அப்போது நளினி பிரபல நடிகையாக இருந்தார்.

இது நளினி குடும்பத்தினருக்கு சலசலப்பை ஏற்படுத்த ராமராஜனை அடித்துவிட்டனர். அந்த நிமிடத்திலே நளினி ராமராஜனை தான் திருமணம் செய்ய வேண்டும் என உறுதியாகி விட்டாராம். ஆனால் அந்த சம்பவத்துக்கு பின்னர் நளினி தமிழ் படங்களிலே புக்காகவே இல்லையாம்.

தாய் அவார்டு விழாவில் இருவரும் சந்தித்துக்கொண்டு மீண்டும் காதல் பூத்துவிட்டது. குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யலாம் என யோசிக்க எம்.ஜி.ஆர் உதவியை இருவரும் நாடி இருக்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் அப்போது சென்னையில் இல்லையாம். சேலத்தில் இருப்பவரை காண நேரில் சென்றனராம்.

இதையும் படிங்க: ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் இருக்கிற நடிகர் அஜித்! இவரே சொன்னதுக்கப்புறம் நோ அப்ஜெக்சன் – அடுத்த பாட்ஷாவா?

அதை தொடர்ந்து திருமண வரவேற்பை அவர்கள் சொன்ன தேதியில் கலந்து கொண்டு கங்கை அமரன் கச்சேரியை உட்கார்ந்து ரசித்த கதை எல்லாருமே அறிந்த சேதி தான். ஆனால் அத்தனை போராடிய இருவரும் கடைசியில் விவாகரத்து வாங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story