மலையாள திரையுலகின் நம்பர் ஒன் வசூல் சாதனை படம்!.. ஓடிடியில் எம்புரான் எப்போ ரிலீஸ் தெரியுமா?

by Saranya M |
empuraan
X

கடந்த மாதம் நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் திரைப்படம் கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால், 250 கோடி வரை வசூல் ஈட்டி மலையாள திரையுலகின் அதிக வசூல் படமாக மாறியது. இந்நிலையில், வரும் எப்ரல் 24ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்பதை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுஜித் வாசுதேவ் இசையமைத்திருந்தார்.

முதலமைச்சர் ஆட்சியில் இருக்கும் போது இறந்துவிடுகிறார் அந்த இடத்தை கைப்பற்ற பலரும் போட்டியிட்டு சண்டைபோடுகின்றனர். இதில் யார் கடைசியில் அந்த ஆட்சியை கைப்பற்ற போகிறார் என கதை களம் அமைந்து ஒரு அதிரடி அரசியல் திரைப்படமாக வெளியானது. ரூ180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட எம்புரான் படம் ரூ250 கோடிக்கு மேல் வசூலித்து லாபத்தை அடைந்து வெற்றி படமானது.

எம்புரான் படத்தின் புரோமோஷனுக்காக பேட்டியளித்திருந்த பிரித்விராஜ், மோகன்லால் மாஸாக எண்ட்ரி கொடுக்கும் சீனே இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் என்ட்ரி பார்த்து தான் எடுத்ததாக கூறியிருந்தார். மேலும் யூடியூபர் இர்ஃபானுடன் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் இருவரும் சேர்ந்து புரோமோஷன் செய்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது எம்புரான் படம் ஒடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் எப்ரல் 24ம் தேதி ஒளிப்பரப்பாகும் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார். எம்புரான் படத்தை அனைவரும் வீட்டில் இருந்தபடி பார்க்க பலரும் எதிர்ப்பார்ப்புடன் கார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தியேட்டரில் படம் வெளியான போது இந்து மக்களுக்கு எதிரான படமாக உள்ளதாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், 24 காட்சிகள் நீக்கப்பட்டன. ஓடிடியில் அந்த காட்சிகள் இடம்பெறுமா? அல்லது நீக்கப்பட்ட காட்சிகளுடன் வெளியாகுமா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Next Story