நடிச்சி முடிச்சாதான் சோறு.. மிஸ்கினால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை!.

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர முயற்சிக்கும் இயக்குனர்களில் இயக்குனர் மிஸ்கினும் முக்கியமானவர். சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மிஸ்கின்.

இந்த திரைப்படத்தில்தான் நடிகர் நரேனும் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் வந்த வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் என்கிற பாடல் பெரும் ஹிட் கொடுத்தாலும் படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றன.

mysskin

mysskin

அதனைத் தொடர்ந்து மிஸ்கின் ஓநாய் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு போன்ற பல படங்களை இயக்கினார். தற்சமயம் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார்.

சோறு போடாமல் வேலை வாங்கிய மிஸ்கின்:

சினிமாவில் தொடர்ந்து புதுவிதமான படங்களை இயக்க வேண்டும் என்கிற ஆசை மிஸ்கினுக்கு உண்டு. தொடர்ந்து பல பேட்டிகளிலும் அதை அவர் கூறியுள்ளார். தற்சமயம் அவரது உதவி இயக்குனர் கூறும் பொழுது படப்பிடிப்பில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார் மிஸ்கின் என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் முக்கியமான காட்சிகள் படமாக்கும் பொழுது மதிய சாப்பாடு நேரத்திற்கு கிடைக்காது என்று கூறுகிறார் அவரது உதவி இயக்குனர். இப்படி ஒரு முறை படப்பிடிப்பு நடக்கும் பொழுது நடிகைக்கான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது அந்த காட்சியை பலமுறை படமாக்கியும் சரியாக வராததால் யாரையுமே மதிய சாப்பாட்டுக்கு அனுப்பாமல் அந்த காட்சியை படமாக்கி கொண்டிருந்தார் மிஸ்கின்.

இதனால் சோர்வடைந்த நடிகை அங்கேயே மயங்கி விழுந்து விட்டாராம். அதன் பிறகு அவரை எழுப்பி அப்போதும் கூட உணவு கொடுக்காமல் குளுக்கோஸ் தண்ணீர் மட்டும் கொடுத்து, படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு அனைவரையும் உணவருந்த அனுப்பி இருக்கிறார் மிஸ்கின். இந்த விஷயத்தை அவரது உதவியாளர் பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ரூம்ல கூட தங்குன ரெண்டு பேரை உயர்த்தி விட்ட பாக்கியராஜ்.. யார் யார் தெரியுமா?..

 

Related Articles

Next Story