Connect with us
nagaraja

Cinema News

நா.முத்துக்குமார் மொத்த சம்பளத்தையும் எங்கிட்ட கொடுத்துட்டார்!. மனம் நெகிழும் தினந்தோறும் நாகராஜ்..

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே தன்னுடைய முதல் படத்திலேயே கவனம் ஈர்ப்பார்கள். அப்படி ஒருவர்தான் தினந்தோறும் நாகராஜ். இவர் இயக்கிய முதல் படம்தான் தினந்தோறும். 1998ம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தில் முரளி ஹீரோவாக நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக சுபலட்சுமி நடித்திருந்தார். மேலும், மணிவண்ணன், தலைவாசல் விஜய், பாலாசிங் என பலரும் நடித்திருந்தனர். அதோடு, இயக்குனர் நாகராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் வாலிபர்களுக்கு வரும் காதல், அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் பெண்கள் என புதிய கதையை நாகராஜ் அமைத்திருந்தார்.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு ஆறு மாசமா டியூன் போட்ட எம்.எஸ்.வி.. அந்த பாட்டுக்காகவே படம் ஹிட்!…

ஒரு பெண் வாலிபனின் வாழ்க்கையில் வந்துவிட்டால் அவன் முன்னேறுவான் என்பது போல திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து 100 நாள் ஓடியது. முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் நாகராஜ் அடுத்தடுத்து படங்களை இயக்கவில்லை.

மதுப்பழக்கத்திற்கு ஆளாகி கேரியரை இழந்தார். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய சில படங்களில் வசனங்களில் உதவி செய்தார். சமீபத்தில் ஊடகத்தில் பேட்டி கொடுத்த நாகராஜ் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நாகராஜ் கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி நெகிழ்ச்சியான தகவல்களை கூறினார்.

இதையும் படிங்க: தொடர்ந்து பிளாப் படங்களில் நடித்தாலும் நயன்தாராவுக்கு 12 கோடி சம்பளம்!.. இதுதான் காரணமா?

பெரிய இடைவெளிக்கு பின் மத்தாப்பூ என்கிற படத்தை இயக்கினேன். எனக்கு நா.முத்துகுமாருடன் ஏற்கனவே நல்ல பழக்கம் இருந்ததால் அவர்தான் பாடல் எழுத வேண்டும் என முடிவெடுத்தேன். 5 பாடல்களை எழுதினார். அடிக்கடி என்னிடம் ‘உங்களுக்கு செலவுக்கு பணம் இருக்கிறதா?’ என கேட்டுகொண்டே இருந்தார்.

ஏனெனில் படம் இயக்கி பல வருடம் கழித்து நான் படம் இயக்க வந்திருந்தேன். பாடல்களை எழுதியதற்கு 80 ஆயிரம் தயாரிப்பாளரிடம் வாங்கி அவருக்கு கொடுத்தேன். அவரோ அதிலிருந்து 5 ஆயிரம் மட்டும் எடுத்துகொண்டு 75 ஆயிரத்தை என்னிடம் கொடுத்துவிட்டார். அப்போது என்னிடம் 300 ரூபாய் மட்டுமே இருந்தது. வேண்டாம் என நான் அவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

அப்போது 75 ஆயிரம் என்பது எனக்கு பெரிய பணம். அவர் பெயரில் மட்டுமல்ல. நிஜத்திலும் முத்துதான். அவரை பாடலாரியராக மட்டுமே பலருக்கும் தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர். அவர் போல எந்த பாடலாசிரியரும் இருக்கமாட்டார். சம்பளத்தில் கொஞ்சம் குறைத்தாலும் பாடல்களை எழுதி தரமாட்டார்கள். ஆனால், முத்துக்குமார் வேறு மாதிரியான மனிதர்’ என நாகராஜ் சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் அந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்!.. ரகசியம் சொன்ன பிரபல காமெடி நடிகர்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top