தமிழுக்கு முகம் சுழிக்கும் நயன்… இந்தியில் முதல் ஆளாக ஆஜராகும் பின்னணி… காசுக்காக இப்படியா?

Nayanthara: நடிகை நயன்தாரா சினிமாவை நம்பி மட்டுமல்ல பல வழிகளில் தொடர்ந்து கல்லா கட்டி வருகிறார். ஆனால் தன்னுடைய முதல் தொழிலான சினிமா ப்ரோமோஷன்களில் அம்மணி தலைக்காட்டுவதே இல்லை. ஆனால் இதிலும் ஒரு பக்கா பிசினஸை பாலோ செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக நயன் உருவான கதையே தனி தான். சாதாரண நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் சிம்புவுடனான காதலுக்கு பின்னர் கோலிவுட்டில் இருந்து விலகினார். சில காலம் கழித்து சிவாஜி படத்தில் ஒற்றை பாடல் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மட்டும் அத செய்யலைனா ரஜினியின் நிலைமை? ரெட் கார்டு சம்பவத்தில் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

அதை தொடர்ந்து பல படங்களிலும் நடித்தாலும் நயன் தனியாக நடித்து ஹிட் கொடுத்த படங்களே அதிகம். ஹீரோயினை மையமாக வைத்து எடுத்த கதைகள் ஹிட்டான நிலையில் தன்னை கோலிவுட்டில் நிலைநாட்டி கொண்டார். ஆனால் அதற்கடுத்து எந்தவித ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவே இல்லை.

ஆனாலும் தன்னுடைய சொந்த பிசினஸ் நிகழ்ச்சிகளில் அம்மணி முதல் ஆளாக ஆஜாராகி விடுகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் தமிழ் ப்ரோமோஷன் எதுக்குமே நயன் வரவில்லை. சக்ஸஸ் மீட்டிற்கு கூட வீடியோவில் வந்து பேசிவிட்டு சென்றார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனியால் தான் மீரா இறந்தாரா? காசுக்காக கண்டப்படி பேசும் பயில்வான்… கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

ஆனால் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் கணவருடன் முதல் ஆளாக சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்து இருந்தார். தமிழ் ரசிகர்கள் பலருக்கும் இந்த விஷயம் கோபத்தினை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடக்கும் போது மிஸ்ஸானவர்.

ஷாருக்கானுடன் திருப்பதியில் படத்தின் சக்ஸஸுக்காக வேண்டிக்கொள்ள சென்றார். தற்போது தமிழில் கிட்டத்தட்ட நயனின் மார்க்கெட் பாதாளத்துக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் பாலிவுட்டில் ஒரு இடத்தினை உருவாக்கவே இவ்வளவு இறங்கி போவதாக கூட தகவல்கள் தெரிவிக்கிறது.

 

Related Articles

Next Story