Connect with us

Cinema News

நயன்தாரா பண்ண அநியாயத்தை பார்த்தீங்களா!.. அதர்வாவுக்காக இப்படி இறங்கி வந்திருக்காரே!..

நடிகை நயன்தாரா தான் நடித்த படங்களின் புரமோஷன்களுக்கே செல்வது கிடையாது. ஆனால் நேற்று நடைபெற்ற அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியின் நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதே சமயம் நயன்தாராவை வைத்து படங்களை தயாரித்து தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் கடுப்பை உண்டாக்கி இருக்கும் என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புரமோஷனுக்கு சென்றதை போல நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன்களுக்கும் போனால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: கமலுக்கு டாட்டா சொன்ன சிம்பு!. எஸ்.டி.ஆர் 48க்கு மாறும் இயக்குனர்!.. அட தயாரிப்பாளர் அவரா?!…

பில்லா, ஆரம்பம் என விஷ்ணுவர்தன் இயக்கிய படங்களில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா நயன்தாராவின் தம்பியாக நடித்துள்ளார்.

இப்படி ஏகப்பட்ட கனெக்ஷன் உள்ள நிலையில் நட்புக்காக நயன்தாரா நேற்று இரவு நடைபெற்ற நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கரை வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஷங்கர் பூட்டி வைத்த ரகசியம்!.. இந்தியன் 3ல் இப்படியொரு ரோல்!.. திடீரென உளறித்தள்ளிய கமல்?

தமிழ் சினிமாவை விட்டுவிட்டு இந்திக்கு சென்ற விஷ்ணுவர்தன் மீண்டும் தமிழில் இயக்கியுள்ள நேசிப்பாயா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், தொடர்ந்து அந்த படத்திற்கான புரோமோஷன்களை பரபரப்பாக படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய சேவியர் பிரிட்டோ நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற விழாவில் நயன்தாரா மற்றும் ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது மீண்டும் ராஜா ராணி பார்ட் 2 வருமா என ரசிகர்களை கேட்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: நான் யாருனு தெரியும்ல? என்கிட்ட வச்சுக்கிட்டா அவ்ளோதான்.. அடாவடி பண்ணும் விக்னேஷ் சிவன்

google news
Continue Reading

More in Cinema News

To Top