Connect with us

Entertainment News

அந்த பார்வையே ஆள கொல்லுதே!.. நயனின் அழகை பார்த்து ஏங்கும் புள்ளிங்கோ!.. சூப்பர் பிக்ஸ்!..

கேரளாவை சேர்ந்த நயன்தாரா ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல வருடங்கள் போராடியும் நம்பர் 2 கதாநாயகியாவே இருந்தார். ஒருகட்டத்தில் குண்டாக இருந்த நயன் எடையை குறைத்து கட்டழகை நச்சென மாற்றி கல்லா கட்ட துவங்கினார்.

nayanthara

ராஜா ராணி படத்தில் அவரின் அழகை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போனர்கள். அதன்பின் முன்னணி கதாநாயகியாக மாறினார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் லேடி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். ஒருபக்கம் விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும், ஒருபக்கம் கதையின் முக்கிய கதாபாத்திரமாகவும் நடிக்க துவங்கினார்.

nayanthara

அப்படி அவர் நடிப்பில் வெளிவந்த மாயா, அறம் போன்ற படங்கள் ஹிட் அடிக்கவே நயனின் சம்பளம் பல கோடிகள் உயர்ந்தது. நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்தார். அதன்பின் இருவரும் சில வருடங்கள் காதல் ஜோடியாக வலம் வந்தனர்.

nayanthara

அதன்பின் சில வருடங்களுக்கு முன் விக்னேஷ் சிவனை திருமணமும் செய்து கொண்டார். அதோடு, வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் அம்மாவாக மாறினார். இப்போது சினிமாவில் நடிக்கும் நேரம் போக குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வருகிறார். அதோடு, புதிய புதிய தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார்.

nayanthara

அடிக்கடி தனது குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை புகைப்படமாக எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புடவையில் அழகை காட்டி தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை பெற்று வருகிறார். இந்த புகைப்படங்களை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

nayanthara

google news
Continue Reading

More in Entertainment News

To Top