More
Categories: Cinema News latest news

சினேகா கேரக்டரில் முதல் தேர்வு இந்த நடிகைதான்… கடைசியில் அந்த பிரபலம் சொன்னது என்ன தெரியுமா?

Sneha: நடிகை சினேகா கோட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க முதலில் அந்த கேரக்டரில் நடிக்க இன்னொரு முன்னணி நடிகையை தான் இயக்குனர் வெங்கட் பிரபு அணுகி இருக்கிறார்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஜய், பிரபுதேவா, சினேகா, லைலா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!

இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடித்திருந்தார். அப்பா கேரக்டரில் நடித்த விஜயின் ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் 20க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர் வசீகரா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 

இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தில் சினேகாவின் கேரக்டர் சாதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் முக்கிய கேரக்டரில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருந்தார். ஆனால் முதலில் இந்த கேரக்டருக்கு வெங்கட் பிரபு நயன்தாராவை நடிக்க வைக்க தான் யோசித்து இருந்தாராம்.

இதையும் படிங்க: மாநாட்டிற்கு வந்த சிக்கல்! எப்படிப் போனாலும் முட்டுதே.. சிக்கலில் விஜய்

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, ஆனால் அது செட்டாகாமல் போனது. இப்படம் ரிலீஸான பின்னர் நயன் கால் செய்து, வெங்கட் பிரபு இந்த கேரக்டருக்கு சினேகாவை போட்டது ரொம்பவே நல்ல விஷயம். அவர்தான் இந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி வந்திருக்கிறார். நடிப்பால் அசத்தி இருக்கிறார் என கூறினார்.

நான் இன்னும் இந்த விஷயத்தை சினேகாவிடம் கூட சொல்லவில்லை. பேட்டி மூலமாகத்தான் அவரிடம் இதை தெரிவிக்கிறேன் என வெங்கட் பிரபு தற்போது தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது. நடிகைக்குள் போட்டிகள் இருக்கும் என கூறப்பட்டாலும் ஒருவரின் வெற்றியை மனமார பாராட்டுவது பெரிய விஷயம் தான் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Published by
Akhilan