எப்பவுமே ஹைடெக் தான்! இந்த ஒரு காரணத்துக்காகவா விலகினார்? வெளியான நயன் - சசிகுமார் பட சீக்ரெட்ஸ்

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான நயன்தாரா முதல் படத்திலேயே ஒரு தேடப்படும் நடிகையாக மாறினார். ஹோம்லி லுக்கில் அனைவரையும் கவர்ந்த நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் கிளாமராகவும் நடித்து வந்தார்.

அவர் கெரியரில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா. அந்தப் படத்தில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக அதுவும் பிகினி உடையில் நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். பிகினி உடையில் இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் அந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதிலிருந்து நயன்தாராவின் மார்க்கெட் உயரத் தொடங்கியது.

இதையும் படிங்க: 3 படம் ஹிட் கொடுத்தேன்.. ஆனாலும் சரண் அப்படி செய்தார்!.. ஃபீல் பண்ணி பேசும் பரத்வாஜ்!..

அந்த நேரத்தில்தான் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படம் வெளியாகி சக்க போடு போட்டுக் கொண்டிருந்தது .பில்லாவில் நயன்தாராவின் நடிப்பை பார்த்து வியந்து போன சசிகுமார் அடுத்ததாக அவர் எடுத்த நாடோடிகள் திரைப்படத்திற்காக நயன்தாராவை நடிக்க வைக்க அப்போது நயன்தாராவிற்கு மேலாளராக இருந்த அஜித்திடம் சசிகுமார் நயன்தாராவின் கால்ஷீட் பெறுவதற்காக கேட்டிருக்கிறார்.

நயன்தாராவும் சுப்பிரமணியபுரம் படத்தின் வெற்றியை அறிந்து நாடோடிகள் திரைப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு சில முன்னணி நடிகர்கள் சசிகுமார் படத்தில் நீங்கள் நடிப்பதா? என்றெல்லாம் நயன்தாராவை பயமுறுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் நயன்தாராவிற்கு நாடோடிகள் பட கதை பிடித்துப் போனதால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: பிசியா நடிச்சிக்கிட்டு இருந்த பரத்!.. இவரு நிலமை இப்படி ஆகிப்போச்சே!…

சில நாட்கள் கழித்து நயன்தாராவின் மேலாளர் அஜித் என்பவர் திடீரென சசிகுமாரிடம் இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிக் கொள்கிறாராம் என்று தெரிவிக்க சசிகுமாருக்கு ஒரே அதிர்ச்சி. யாரோ நயன்தாராவின் மனதை மாற்றி இருப்பதாக உணர்ந்த சசிகுமார் அவர் நடிக்க இருந்த கேரக்டரில் அனன்யாவை நடிக்க வைத்திருக்கிறார்.

அந்த கேரக்டர் அந்தப் படத்திற்கு எந்த அளவு முக்கியத்துவமாக இருந்தது என்பதை படம் பார்த்த அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் நாடோடிகள் திரைப்படம் எப்பேர்பட்ட வெற்றியைப் பெற்றது என்பதையும் நாம் அறிந்திருப்போம். இந்த சுவாரஸ்ய செய்தியை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: கடனிலிருந்த நண்பனை தூக்கிவிட்ட சிவாஜி கணேசன்!.. பெரிய தயாரிப்பாளரும் ஆயிட்டாரு!..

 

Related Articles

Next Story