More
Categories: Cinema History Cinema News latest news

தைரியம் இருந்த விஜயை ‘அப்படி’ செய்ய சொல்லுங்க.! சவால் விட்ட அஜித்.!

தமிழ் சினிமாவில் தற்போதைய இரு துருவங்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவரை வைத்து தான் தற்போதைய தமிழ் சினிமா வியாபாரம் நடந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் சமாதான அளவு ரசிகர்கள் இருக்கின்றனர்.

Advertising
Advertising

இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என எனும் திரைப்படத்தின் கதையை முதலில் அஜித்திடம் இயக்குனர் கூறிவிட்டார். அதாவது அதில் இரண்டு ஹீரோ, ஒரு ஹீரோ பார்த்திபன், இன்னொரு ஹீரோ அஜித். பார்த்திபன் கதாபாத்திரம் கதாநாயகியை ஒருதலையாகக் காதலிக்கும் வண்ணம் இருக்கும்.  இரண்டாவது ஹீரோ கதாபாத்திரம், கதாநாயகி ஹீரோவை காதலிப்பது போல இருக்கும்.

இந்த கதையை கேட்ட அஜித், தான் இரண்டாவது ஹீரோ ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறி விட்டாராம். முதல் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜயிடம் போய் இயக்குனர் கூறினாராம். ஆனால், விஜய் அதை மறுத்துள்ளார். நான் வேண்டும் என்றால் இரண்டாவது ஹீரோ கதாபாத்திரம் செய்துவிடுகிறேன். அஜித்தை வேண்டுமென்றால் அந்த பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லுங்கள் என அவர் கூறி விட்டாராம்.

இதனை இயக்குனர் அஜித்திடம் கூற, அஜித் மறுத்துவிட்டு, தைரியமிருந்தால் விஜய்யை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லுங்களேன் பார்ப்போம். நான் நடிக்க மாட்டேன். என பதிலளித்துள்ளார். பின்னர் இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல். அந்த கதாபாத்திரத்திற்கு பார்த்திபனை அணுகி கதை கூறி பார்த்திபன் ஹீரோவாக நடிக்க விட்டு, அஜித்தை இரண்டாவது ஹீரோவாக மாற்றி விட்டார் இயக்குனர் ராஜகுமாரன். இதனை ஒரு பேட்டியில் இயக்குனர் ராஜகுமாரனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் – அனுஷ்காவுக்கும் ஆயாவுக்கும் என்ன வித்தியாசம்.! குதர்க்கமாக பதில் கூறிய சூப்பர் ஸ்டார்.!

ஏனென்றால், அந்த நீ வருவாய் என கதையில், இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் அஜித்திற்கு தான் ஹீரோவுக்கான அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும். முதல் ஹீரோவாக இருக்கும் பார்த்திபனுக்கு கதாநாயகியை காதலிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். அது அஜித், விஜய் இருவருக்கும் ஏன் பிடிக்கவில்லை என்றால், தாங்கள் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்கள். ஆதலால் இந்த சமயத்தில் இந்த மாதிரியான முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது. என இருவருமே ஒரு சேர முடிவெடுத்து விட்டனர் போல.

Published by
Manikandan

Recent Posts