Connect with us
suriya

Cinema News

இப்ப மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாமதான்… சூர்யா சொன்னது இப்ப அவருக்கே ஆப்பா போச்சே!…

ஜப்பான் படம் வெளியான போது நடிகர் கார்த்திக் 25 பட விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கார்த்திக்கை பருத்திவீரன் படத்தில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் அமீர் கலந்துகொள்ளவில்லை. இது பேசுபொருளாக மாறியது. சில ஊடகங்கள் அமீரிடம் இதுபற்றி கேட்க ‘எனக்கு முறையான அழைப்பு வரவில்லை’ என அமீர் சொன்னார்.

மேலும், பருத்திவீரன் படம் உருவான போது அப்படத்தின் தயாரிப்பாளர் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் செலவை காரணம் காட்டி விலகிக்கொள்ள அமீரே பல இடங்களில் கடன் வாங்கி அந்த படத்தை தயாரித்து இயக்கினார். சுமார் 1.65 கோடி அவரை அமீர் கடன் வாங்கி செலவு செய்து படத்தை முடித்தபின்னர் படத்தை ஞானவேல் ராஜா தனது பெயரில் எழுதி வாங்கி கொண்டார். அதோடு, அமீர் செலவு செய்த பணத்தையும் அவருக்கு கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: மூச்சுவிட சிரமப்படும் விஜயகாந்த்!.. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?!.. நடப்பது இதுதான்!..

இதில் கோபமடைந்த அமீர் சிவக்குமார் குடும்பத்தினரான சூர்யா, கார்த்தி ஆகியோரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். மேலும், ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்திலும் புகார் கொடுத்து கடந்த 17 வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது. ஆனால், அமீர் பொய் கணக்கு காட்டி என்னிடமிருந்து காசை திருட பார்த்தார் என்கிற ரேஞ்சில் ஞானவேல் ராஜா பேச சசிக்குமார், பொன் வண்ணன், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாரதிராஜா என பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

எனவே, தான் பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் விடாத சமுத்திரக்கனி ‘இந்த வருத்தம் தெரிவிக்கிற சீன்லாம் வேணாம். பத்திரிக்கையாளர் முன்பு மன்னிப்பு கேட்கணும். அதோடு, பருத்துவீரன் படத்தில் வேலை செய்த பலருக்கும் சம்பள பாக்கி இருக்கிறது. அதையெல்லாம் கொடுக்கணும்’ என காட்டமாக செய்தி வெளியிட்டார்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்.. முதல் ஆளாக களத்தில் இறங்கிய பார்த்திபன்… என்ன செய்தார் தெரியுமா?

இவ்வளவு அமுளி துமுளி நடக்கும்போது இதுபற்றி நன்றாக தெரிந்த நடிகர் சூர்யாவும், கார்த்தியும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்கள். சமூகவலைத்தளங்களில் பலரும் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2017ம் வருடம் நம்பி்க்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்ற போது சூர்யா டிவிட்டர் பக்கத்தில் ‘இப்போது மிக்சர் சாப்பிட்டு கொண்டிருப்பது நாம்தான் மக்களே’ என டிவிட் செய்திருந்தார். இந்நிலையில், அந்த டிவிட்டை சிலர் ரீடிவிட் செய்து இப்போது இது சூர்யாவுக்கு பொருந்தும் என அவரை நக்கலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீரென அழைத்த விஜய்… திக்குமுக்காடி போன அட்லீ!.. அவரே அத எதிர்பார்க்கலயாம்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top