டோலிவுட்டில் நடித்து பிரபலமானவர் நித்தி அகர்வால். தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் ‘முன்னா மைக்கேல்’. சில அழகிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றவர் .தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அதோடு, சிம்பு, பாராதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்து சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’பாடல் வைரல் ஹிட். அதன்பின் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார்.
குஷ்புவை அடுத்து இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் சிலர் கோவில் கட்டினர். எனவே, எனக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாம். அன்பு காட்டினால் மட்டுமே போதுமானது என அவர் இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்த கதையும் நடந்தது.
தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் முன்னழகை காட்டும் வகையில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் நித்தி அகர்வால்.
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…
பாரதிராஜாவால் தமிழில்…