சூரிய வெளிச்சத்தில் சுகமா இருக்கும் நிவேதா பெத்துராஜ்!.. கமெண்ட்டுகளை மட்டும் பார்த்துடாதீங்க!..

புதிதாக எந்த படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்துக்கு கீழ் ஏகப்பட்ட மோசமான கமெண்டுகளும், சர்ச்சைகளைக் கிளப்பும் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக 2016 ஆம் ஆண்டு ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: சன் டே செம கூட்டம்!.. சுந்தர் சிக்கு அடித்த ஜாக்பாட்.. அரண்மனை 4 படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு?..

ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சங்கத்தமிழன், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் மற்றும் கடைசியாக கடந்த ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான Boo எனும் தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஒரு சில படங்களை தவிர்த்து நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவின. சுமார் ஒரு வருஷமாக புது படங்கள் ஏதும் கிடைக்காமல் துபாயில் வசித்து வரும் நிவேதா பெத்துராஜ் குறித்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின.

இதையும் படிங்க: ஓவர் வீராப்பால் தலைல துண்ட போட்டதுதான் மிச்சம்! விஜய்க்கு எதிரா சுந்தர் சி எடுத்த ரிஸ்க்

உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கமாக உள்ளார் என்றும் அவருக்கு துபாயில் 50 கோடி ரூபாயில் பங்களா வாங்கி கொடுத்துள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. மேலும், சென்னையில் கார் பந்தயத்தையே நிவேதா பெத்துராஜுக்காகத்தான் உதயநிதி ஸ்டாலின் நடத்துகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன. இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என நினைத்த நிவேதா பெத்துராஜ் தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு போஸ்ட் ஒன்றரை போட்டிருந்தார்.

இந்நிலையில், சூரிய ஒளி தண்ணீரில் பட்டு தங்கம் போல மின்னுவது போன்ற இடத்தில் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நேற்று அவர் வெளியிட்டுள்ள நிலையில், மீண்டும் உதயநிதி ஸ்டாலின் உடன் தொடர்பு படுத்தி படுமோசமான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்த அம்மா சொன்ன வார்த்தை!.. அதோடு விட்டுட்டேன்!.. யோகிபாபு சொன்ன பிளாஷ்பேக்!..

 

Related Articles

Next Story