More
Categories: Cinema News latest news

என்னது… தயாரிப்பாளர் கே பி சவுத்ரிக்கும் சுரேகா வாணிக்கும்!.. – சம்திங் சம்திங்கா…!

கேபி சௌத்திரிக்கும் தெலுங்கு தமிழ் படங்களில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்த சுரேகா வாணிக்கும் சம்திங் சம்திங் என்ற கேள்வி தற்போது பரவலாக ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சுரேகா வாணி படு உருக்கமாக செய்தியினை வெளியிட்டு இருக்கிறார். இவர் நடிகர் அஜித் மற்றும் விக்ரம் உடன் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

Advertising
Advertising

கணவனை இழந்து வாழும் இவர் தன் மகளுக்காக வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் இவருக்கு போதைப் பொருள் வழக்கில் தொடர்பு உள்ளது என்று கைது செய்யப்பட்ட நிலையில் தெலுங்கு தயாரிப்பாளரான கே பி சவுத்ரியோடு தொடர்பு உள்ளதாக கிசு கிசுக்கள் எழுந்தது.

Surekha Vani

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலவிதமான கருத்துக்களை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மக்களது மனதிலும் ஏற்படுத்தி விட்டது.

இதனை அடுத்து வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சுரேகா இந்த வீடியோவில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள கடத்தல் குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பு இல்லை என்றும் மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் தனது குடும்பத்தார் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு திரை உலக பிரபலங்களில் மிக முக்கியமான சில பேர் தயாரிப்பாளர் சவுத்ரியுடன் இணைந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த பிரபலங்களில் சுரேகா வாணியும் ஒருவராவார்.

இதனை அடுத்து சுரேகா வாணி உருக்கமாக தன்னுடைய வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்பதை டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். 

எனவே உண்மை நிலை என்ன என்று தெரியாத போது பலவிதமான விமர்சனங்களை கொண்டு பேசுவதின் மூலம் மற்றவர்களின் மனது புண்படும் என்பதை உணர்ந்து இனிமேல் செயல்படுவது மிகவும் நல்லது.மேலும் இப்படி ஒரு நியூஸ் பரவுவது தவறானதாகும்.

Published by
Brindha

Recent Posts