Connect with us
rajini

Cinema News

யாரும் அவர தேடி போகல!.. அவர்தான் வாண்டடாக வண்டியில் ஏறுகிறார்… ரஜினியை சீண்டும் பிரபலம்!..

சமீப நாட்களாக, இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து தான் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய், ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஜெயிலர் பட ஆடியோ லாஞ்ச் விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை கூறியிருந்தார். அதோடு மட்டுமில்லாமல், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூட இது பற்றி பேசியிருந்தார்.

rajinikanth

73 வயதில், உங்கள் வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் என்று செல்லிக்கொள்ளுங்கள் என அவர் பேசியிருந்தார். இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், ரஜினி வீட்டு வாசலில் எந்த தயாரிப்பாளரும் நிற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ரஜினி சொன்ன காக்கா கதையெல்லாம் சும்மா மேடைக்காக பேசப்பட்டது என்று தான் நான் நினைக்கிறேன்.

அடைமொழி, பட்டங்களை விரும்பாத நடிகர்கள் மிக மிக அபூர்வம் கலாநிதிமாறன் கூறுவது போல, தயாரிப்பாளர்கள் வந்து வீட்டு வாசலில் நின்றால் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்றால், நடிகர் விஜய் தான் சூப்பர் ஸ்டார். அவர் வீட்டு வாசலில் தான் அதிக தயாரிப்பாளர்கள் நிற்கிறார்கள். அவருடைய படங்கள் தான் அதிகமாக வசூல் செய்கிறது. ரஜினியை விஜய் முந்திவிட்டார் என்பது தான் எதார்த்தம். 

rajinikanth

ரஜினி வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் காத்திருக்கவில்லை. ரஜனியை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். ரஜினி கேட்கும் சம்பளத்தை கொடுத்தால், படத்தில் லாபம் எடுக்க முடியவில்லை என்று நினைக்கிறார்கள். ரஜினியே தான் கால் பண்ணி தயாரிப்பாளர்களிடம் படம் பண்ணலாமா என்று கேட்கிறார்.

சன் பிக்சர்ஸ், லைக்கா போன்ற மிக பெரிய நிறுவனங்கள் மட்டும் தான் ரஜினியை வைத்து படம் தயாரிக்க ரெடியாக இருக்கிறார்கள். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரஜினியே கால் செய்து நான் உங்கள் தயாரிப்பில் படம் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார். ஆனால் அவர்கள் அதற்கு தயாராக இல்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க- அஜீத்கிட்ட அது எனக்கு பிடிக்கல.. சொல்லவும் முடியல!.. பல வருடங்கள் கழித்து பேசிய தமன்னா…

google news
Continue Reading

More in Cinema News

To Top