ஒன்னு இல்ல! ரெண்டு இல்ல.. மூணு காதல்! நடிகையுடன் இருட்டுக்குள் அஜித் செஞ்ச காரியம்..

by Rohini |   ( Updated:2025-05-04 00:20:24  )
Shalini (1)
X

Shalini (1)

Ajith:தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவரைப் பற்றி பல சர்ச்சைகள் சமீப காலமாக எழுந்து வருகின்றன. குறிப்பாக அஜித் ஹீரா இவர்களுக்கு இடையேயான காதல் நெருக்கம் போன்ற செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வளவு ஆண்டுகள் இல்லாமல் இப்போது ஏன் இந்த திடீர் சர்ச்சை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு பக்கம் அஜித் கார் ரேசில் அவருடைய சாதனையை தொடர்ந்து அடைந்து வருகிறார். இன்னொரு பக்கம் பத்மபூஷன் விருதையும் பெற்றிருக்கிறார்.

அவருடைய குட் பேட் அக்லி திரைப்படமும் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியடைந்திருக்கிறது. இப்படி தொடர் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் அஜித்தை பற்றி ஏன் இந்த திடீர் சர்ச்சை என அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர். எந்த ஒரு மனிதனுக்கும் கடந்த கால வாழ்க்கை என்பது கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். அதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்கையில் அஜித்தின் அந்த கடந்த கால வாழ்க்கையை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள் என அனைவரும் கேட்டு வருகின்றனர்.

இதைப் பற்றி ஹீரா தரப்பிலும் சரி அஜித் தரப்பிலும் சரி எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் பத்மபூஷன் விருது பெரும் நேரத்தில் ஹீராவின் வலைதள பக்கத்திலிருந்து ஒரு பதிவு வெளியானது .இந்த நடிகர் தான் என குறிப்பிடாமல் ஹீராவின் அந்த ஒரு அறிக்கை மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டவையாக இருந்தது. அவர் என்னை ஏமாற்றினார் என்னுடன் பழகினார் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

அது முழுக்க முழுக்க அஜித்தை பற்றி தான் எழுதி இருக்கிறார் என வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது அஜித்துக்கும் ஹீராவுக்கும் இடையே காதல் இல்லாமல் இல்லை. இருந்தது. அதற்கு நானே சாட்சி. அந்த காதலை முதலில் பத்திரிகைகளில் எழுதியது நான்தான். அது மட்டுமல்ல நடிகை சுவாதியுடனும் அஜித்துக்கு காதல் இருந்தது. அந்த காதலையும் முதன் முதலில் பத்திரிக்கையில் எழுதியது நான்தான்.

அதோடு அஜித் ஷாலினி காதலையும் பத்திரிக்கையில் எழுதியது முதன் முதலில் நான்தான். அதனால் அஜித்தின் தொடர் இந்த மூன்று காதலுக்கு நானே சாட்சி. அதுமட்டுமல்ல காதல் கோட்டை திரைப்படத்தில் எனக்கு தெரிந்த நண்பர் டெக்னீசியன் ஆக வேலை பார்த்தார். அப்போது அவரை சந்திக்க நான் ஒரு சமயம் படப்பிடிப்பிற்கு சென்றேன். அப்போது படப்பிடிப்பு நடக்காமல் கொஞ்சம் தாமதப்படுத்திக் கொண்டிருந்தார்கள் .

என்னாச்சு என்று நான் கேட்டபோது அதற்கு அந்த டெக்னீசியன் இந்த அஜித்தும் ஹீராவும் பண்ற அட்ராசிட்டி தாங்கவே முடியவில்லை. லைட்ஸ் எல்லாம் ரெடியாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் அந்த இருட்டுக்குள் சென்று ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஹீரா பின்னாடி அந்த பையன் சுற்றிக் கொண்டே இருக்கிறான் என அஜித்தை பற்றி கூறியுள்ளார். இப்படி இருக்கும் பொழுது எப்படி படப்பிடிப்பு நடக்கும் என்று புலம்பினாராம் .இதை ஒரு பேட்டியில் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

Next Story