சமந்தா போட்ட ஸ்கெட்ச்!.. ஓட்டம் எடுத்த பிரியங்கா சோப்ரா!.. வெயிட்டான கம்பேக்கிற்கு ரெடியாம்!..

நயன்தாரா, கீர்த்தி சுரேஷுக்கு எல்லாம் சான்ஸ் கொடுத்த இந்த ரோஸ் மில்க்கை மறந்துட்ட பார்த்தியா என அட்லீயை அலேக்காக லாக் செய்து விட்டாராம் நடிகை சமந்தா. ஏற்கனவே அல்லு அர்ஜுன் சமந்தா விவகாரத்து சர்ச்சை எழுந்த நிலையில், உடனடியாக 5 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து அவரை தனது படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட வைத்திருந்தார்.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கவுள்ள 6வது படத்தில் அல்லு அர்ஜுனின் 22வது படத்தில் ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தனது இன்ஃப்ளூயன்ஸ் மூலமாக பிரியங்கா சோப்ராவுக்கு செக் வைத்து அந்த பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை சமந்தா பெற்று விட்டார் என்கின்றனர்.

நடிகை சமந்தாவுக்கு வாழ்க்கையில் திடீரென அடுத்தடுத்து பல மரண அடிகள் விழுந்த நிலையில், சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் திரும்பவும் இந்த ஆண்டு நடிக்க வந்த நிலையிலும், இன்னமும் அவர் நடிக்கும் படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை.
சமீபத்தில், 2 ஆண்டுகளாக தமிழில் அவர் நடிக்கவில்லை என்றாலும் ஒரு யூடியூப் சேனல் அவரை அழைத்து விருது வழங்கியது. மேலும், தொடர்ந்து சோஷியல் மீடியாவில் சமந்தா தனது ஐடி டீமை வைத்து ஜோராக வேலை பார்த்து வருவதாக கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா தான் ஹீரோயின் என்கிற அறிவிப்பு வரும் என சினிமா வட்டாரம் பேச ஆரம்பித்து விட்டது.
ஷாருக்கானின் ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு அட்லீ வாய்ப்புக் கொடுத்திருந்தார். அதே போல பல ஆண்டுகளாக பாலிவுட்டில் ஹீரோயினாக வேண்டும் என கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷை தனது தயாரிப்பு மூலம் அட்லீ அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், மெர்சல் படத்தில் நடித்த சமந்தா தான் அல்லு அர்ஜுன் ஜோடி என்கின்றனர். இந்த போட்டியில் நடிகை ஜான்வி கபூர் பெயரும் அடிபட்டு வருகிறதாம். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என தொடர்ந்து தெலுங்கில் முகாமிட்டு பெரிய ஹீரோக்கள் படங்களை வளைத்துப் போட்டு வரும் ஜான்வி கபூர் அல்லு அர்ஜுன் படத்தையும் அள்ள துடித்துக் கொண்டிருக்கிறாராம்.