latest news

MGR: நீ காசு கொடுக்க வேணாம்பா!. எம்.ஜி.ஆருக்கு புண்ணிய பாடமெடுத்த மூதாட்டி..

மக்களால் வள்ளல் என அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர்.. சினிமா மூலம் மக்களிடமிருந்து அவர் என்ன சம்பாதித்தாரோ அதை எல்லாவற்றையும் அவர் மக்களுக்காகவே திருப்பிக் கொடுத்தார் என்பதால்தான் அந்த பட்டம் அவருக்கு கிடைத்தது. 60களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் எம்ஜிஆர்.. அவர் நடிப்பில் வெளிவந்த 99 சதவீத படங்கள் சூப்பர் ஹிட் படங்கள்தான். எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என நினைக்காமல் தனது திரைப்படங்களில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைத்தவர் எம்ஜிஆர்..

எம்ஜிஆர் சினிமாவில் நடித்து சூப்பர்ஸ்டாரக மாறி பல லட்சங்கள் சம்பளம் வாங்கி அரசியல் கட்சியை துவங்கி மூன்று முறை முதலமைச்சராக இருந்ததுதான் பலருக்கும் தெரியும்.. ஆனால் சிறு வயது முதல் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கும் வரை அவர் பல நாட்கள் பட்டினி கிடந்ததும், அவர்களின் குடும்பம் வறுமையில் வாடியதும் பலருக்கும் தெரியாது.. இன்னும் சொல்லப்போனால் வறுமை காரணமாகத்தான் சத்யா அம்மாள் எம்ஜிஆர், சக்கரபாணி ஆகிய இரு மகன்களையும் சிறுவயதிலேயே நாடகத்திற்கு அனுப்பினார்.. இருவரும் நாடகத்தில் சம்பாதித்த காசில்தான் அவர்களின் குடும்பம் சாப்பிட்டது..

இந்நிலையில்தான், பேச்சாளர் சுகிசிவம் ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். எம்ஜிஆர் சிறுவயதில் தினமும் காலை வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மூதாட்டியிடம் காலணா கொடுத்து புட்டு வாங்கி செல்வாராம். அதை அவர், அவரின் அண்ணன் மற்றும் அம்மா சத்யா மூன்று பேரும் சாப்பிடுவார்களாம்.. ஒருநாள் புட்டு வாங்க காலணா கூட அவரிடம் இல்லை. ஆனால், தன்னுடைய பசியை விட அம்மா பசியோடு இருக்கக்கூடாது.. அம்மாவுக்கு உணவு கொடுக்க வேண்டும் என நினைத்த எம்ஜிஆர் அந்த புட்டுக்கடைக்கு சென்றிருக்கிறார்.

ஆனால் காசு இல்லாமல் எப்படி வாங்குவது? எப்படி கேட்பது? என்கிற தயக்கம்.. கடைக்கு அருகில் செல்வது.. தயங்கி நிற்பது.. கடைக்கு அருகில் போவது.. தயங்கி நிற்பது என இருந்த அவரைப்பார்த்த அந்த மூதாட்டி ‘டேய் ராமச்சந்திரா.. உனக்கு என்னாச்சி?.. தினமும் காலணா புட்டு வாங்குவியே!.. ஏன் இப்படி தயங்கி நிக்கிறே?’ என்று கேட்டிருக்கிறார்..

அதற்கு எம்ஜிஆர் ‘இல்லம்மா என்கிட்ட இன்னைக்கு காலணா இல்லை.. ஆனா வீட்ல அம்மா பசியோட இருக்காங்க.. உங்ககிட்ட எப்படி கேட்கிறதுன்னு யோசிக்கிறேன்’ என சொல்ல ‘டேய் உன்கிட்ட நான் காசு கேட்டனா?.. நீ புட்டு எடுத்துட்டு போ.. காசு அப்புறமா குடு’ என சொல்லியிருக்கிறார்.. புட்டை எடுத்துக்கொண்ட எம்ஜிஆர் மூதாட்டியிடம் ‘நான் காசு கொடுக்காம இந்த ஊரை விட்டு போயிட்டா என்னம்மா பண்ணுவீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு பதில் சொன்ன அந்த மூதாட்டி ‘டேய்.. நீ காசு கொடுத்தா அதை வியாபார கணக்குல எழுதுவேன்.. நீ கொடுக்கலைன்னா அதை புண்ணிய கணக்குல எழுதுவேன் போடா’ என்று சொன்னாராம்..

லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அது புண்ணியம் என்கிற எண்ணத்தை சிறுவயதிலேயே எம்ஜிஆருக்கு பலரும் இப்படி சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அவர் நடிகரான பின் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

8 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

15 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

16 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

17 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago