Connect with us

Cinema History

ஒரு படத்துக்கு இசையமைத்த ஐந்து இசையமைப்பாளர்கள்! – என்ன படம் தெரியுமா?

Music Directors: பொதுவாகவே ஒரு சினிமாவுக்கு ஒரு இசையமைப்பாளர் தான் மியூசிக்கின் எல்லா வேலைகளையுமே செய்வார். தற்போதைய சூழலில் பிஜிஎம்முக்கு ஒருவர், பாடலுக்கு ஒருவர் என இசையமைக்கின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர் இருந்தார்கள் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வசந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே. இந்த படத்தில் ஷாம், சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். காதல் தோல்வியாக இருந்தாலும் ரொம்ப பாசிட்டிவாக இந்த கதை நகர்ந்து இருக்கும். 20 வருஷத்துக்கு முன்னர் வந்தாலும் படம் இன்னும் இளசுகளிடம் லைக்ஸ் அள்ளும்.

இதையும் படிங்க: என்னது இது சிவாஜி இயக்கிய படமா? ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் எதுனு தெரியுமா?

இந்த படத்தில் தான் ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து பாடல்களுக்கு பணியாற்றி இருக்கின்றனர். இந்த ஐடியாவை பிடித்தவர் இயக்குனர் வசந்த் தான். ஐந்து பாட்டுக்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

முதலில் அப்போது பிரபல பாடகராக இருந்த ஸ்ரீநிவாஸை இனி நானும் நானில்லை பாடலுக்கு இசையமைக்க வைத்தார். இந்த பாடலை அவரே சுஜாதாவுடன் இணைந்து பாடி இருந்தார். ரமேஷ் விநாயகம் இப்படத்தில் அறிமுகமாகி ஒரு பாடலை இசையமைத்து இருந்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை மறந்துபோன சிவாஜி!.. ஆனாலும் நடிகர் திலகத்துக்கு ஆதரவா நின்ன கேப்டன்!..

தொட்டு தொட்டு பாடலை அவரே பாடினார். நடிகர் ராகவ், ராஜா என்பவருடன் இணைந்து ஒரு காதல் பாடலை இசையமைத்து இருந்தனர். இருவரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இவர்கள் இசையமைத்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடி இருந்தார். 

அனுராதா ஸ்ரீராமின் தம்பி முருகன் பொய் சொல்லலாம் என்ற பாடலை இசையமைத்தார். இதை உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் பாடி இருந்தனர். அரவிந்த்-சங்கர் என்பவர்கள் இணைந்து யாமினி யாமினி பாடலை இசையமைத்தனர். இதை ஹரிஷ் ராகவேந்திரா பாடி இருந்தார். எல்லா பாடல்களுமே ஹிட் ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top