Categories: latest news

ரசிகர்கள் தலைவலியோட போகலாமா?!… என்னப்பா ஆஸ்கார் நாயகனே இப்படி சொல்லிட்டாரு!..

பார்வையாளர்கள் தலைவலியுடன் வெளியேறினால் எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது என்று ரசூல் பூக்குட்டி தெரிவித்து இருக்கின்றார்.

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் பீரியட் படமாக உருவாகியிருந்தது. முன் ஜென்ம கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்கள். மேலும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

இதையும் படிங்க: கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா?.. ஞானவேல் ராஜா செய்த வேலை!.. கலாய்க்கும் ஃபேன்ஸ்..

மிகப்பெரிய பொருட்ச அளவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. சூர்யா நடிப்பில் வெளிவந்த அஞ்சான் திரைப்படத்தை காட்டிலும் கங்குவா படத்திற்கு அதிக அளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அதிக ட்ரோல்களை சந்தித்த இந்தியன் 2 திரைப்படத்தையே கங்குவா திரைப்படம் மிஞ்சுவிடும் என்பது பலரின் கருத்து.

இரண்டு வருடங்களாக கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா செதுக்குகிறேன் என்கின்ற பெயரில் மொத்தமாக சூர்யாவின் கெரியரையே முடித்துவிட்டார். இந்த திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. அதை தவிர வேறு எதுவும் இல்லை என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

அதிலும் தேசிய விருது வாங்கிய தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இசையமைக்கும் பணியை ஒப்படைத்ததற்கு படம் முழுக்க இரைச்சல் சத்தத்தை பயன்படுத்தி ரசிகர்களின் காதை செவிடாக்கி விட்டார். படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் அனைவரும் நீங்கள் படம் பார்க்க வந்தால் கட்டாயம் மாத்திரையுடன் வந்து படத்தை பார்த்து செல்லுங்கள் என்று கூறும் அளவிற்கு படத்தில் தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசை இடம் பிடித்திருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் பீரியட் போர்ஷனில் அதிகளவு சத்தம் இருக்கும் காரணத்தால் நடிகர்கள் பேசும் எந்த வார்த்தையும் மக்களுக்கு சரியாக புரியவில்லை என்ற கருத்தும் இருந்து வருகின்றது. இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற இந்திய சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கங்குமா படம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றார்.

இதையும் படிங்க: எனக்கு அது ரொம்ப கூச்சமா இருக்கும்… கெத்து தினேஷ் என்ன சொல்றாருன்னு பாருங்க…

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இதுபோன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தை பார்க்கும் போது மனம் வருத்தமாக இருக்கின்றது. இது யாருடைய குற்றம்? ஒலிப்பொறியாளரின் குற்றமா? கடைசி கூடுதல் விஷயங்களை சேர்க்க சொல்பவர்களின் குற்றமா? ஒலி கலைஞர்களே நாம் இப்போது இதைப்பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். பார்வையாளர்கள் தலைவலியுடன் வெளியேறினால் எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியிருக்கின்றார்.

ramya suresh

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

47 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago