Kesari Chapter2: பாலிவுட்டில் அடிக்கடி செய்யும் சூப்பர் சம்பவமாக இந்த முறை ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேசரி சேப்டர் 2. இப்படத்தின் பாசிட்டிவ், மைனஸ் சொல்லும் திரைவிமர்சனம்.
கேசரி படம் என்றாலே பெரும்பாலும் நினைவுக்கு வருவது போர்க்களம். ஆனால் இந்த “கேசரி சாப்டர் 2”, முழுக்கமுழுக்க ஒரு சட்டவழக்காக அரசியல் சார்ந்த வரலாற்று படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை தொடர்ந்து, அந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக சட்டத்தின் மையமாகப் போராடிய பிரிட்டிஷ் இந்திய வழக்கறிஞர் சி. சங்கரன் நாயர் அவர்களின் உண்மையான வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் ஜாலியன் வாலா பாக் படுகொலையை விசாரணை செய்யும் பணியை பிரிட்டிஷ் அரசு அவருக்கு அளிக்கிறது, அவர்களுக்குப் பக்கபலமாக ஒரு அறிக்கையை தான் அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அமிர்தசரில் பொது மக்களை, ஆயுதம் இல்லாமல் இருந்தவர்களை, ஜெனரல் ரெஜினால்ட் டையர் கொடூரமாக சுட உத்தரவிட்ட உண்மையை நாயர் கண்டறிகிறார்.
இந்தக் கொடூரமான உண்மை அவருடைய மனசாட்சியை உலுக்கியதால், அவர் “தி கிரௌன்” மற்றும் ஜெனரல் டையரை எதிர்த்து வழக்கு தொடர்கிறார். இந்த கதை, நீதிக்கான போராட்டத்தின் மூலம் வரலாற்றை மாற்ற முயன்ற ஒரு மனிதனின் துணிச்சலான பயணத்தைச் சொல்கிறது.
சங்கரன் நாயகராக அக்ஷய் குமாரும், அவருக்கு எதிராக வாதாடும் நெவேலி மெக்கின்லியாக மாதவன் நடித்து இருக்கிறார். இருவருமே நடிப்பில் கில்லி என்பதால் இந்த கோர்ட் டிராமாவை பார்ப்பது செம திரில்லிங்காக அமைந்து இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அனன்யா பாண்டே, ரெஜினா கசாண்ட்ரா தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை செமையாக செய்து அசத்தி இருக்கின்றனர். இப்படம் பரபரப்பாக செல்வதில் இங்குமே அலுப்பு இல்லாமல் செல்கிறது.
ஆனால் இப்படத்தில் இந்தி பதிப்பு மட்டுமே ஹாட்ஸ்டாரில் இருக்கிறது. தமிழில் இல்லை என்பதுதான் பெரிய குறை. ஆனால் இப்படம் ரசிகர்களுக்கு செம திரில்லிங்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதே உண்மை.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…