Pandian Stores2: மீனாவின் பரிதாப நிலை… உடைந்த கோமதி… குமரவேலின் நிலை என்ன?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 நிகழ்ச்சியில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
குமரவேலை கொன்றதாக மீனா செந்திலுக்கு கால் செய்து சொல்ல அவர் பதறிவிடுகிறார். பின்னர் மீனா போலீஸுக்கு போகிறேன் எனக் கூற ஆனால் செந்தில் பதறி அவரை தடுத்து விடுகிறார். நான் வர வரை நீ எதுவும் செய்யக்கூடாது என சத்தியம் வாங்குகிறார்.
பின்னர் வெளியில் வர கதிரும் தயாராக இருக்கிறார். அவரிடம் நடந்த விஷயத்தை சொல்ல இருவரும் என்ன செய்வதென்று கவலையாக சொல்ல பார்த்துக்கலாம் எனச் சொல்லி காரில் கிளம்புகின்றனர். காரில் வரும் போது செந்தில் மீனா நினைத்து வருந்திக்கொண்டே இருக்கிறார்.
கதிர் நம்ம போறோம் தானே அண்ணா பார்த்துக்கலாம். நீ பதட்டப்படாம இரு. கொஞ்சம் தூங்கு என்ன செய்யலாம் என யோசிக்கலாம் என கதிர் அவருக்கு சமாதானம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். வீட்டில் மீனா ராஜியிடம் நான் வேணும் என்றே அவனை கொலை செய்யலை என கதறுகிறார்.
கோமதியும் அய்யோ இப்படி வந்து எங்க குடும்பத்தையே மோசமான நிலைக்கு கொண்டு வந்துட்டியே என அழுகிறார். இனிமே அரசிக்கு எப்படி கல்யாணம் ஆகும்? கடை நடத்தவே முடியாது. மொத்தமா என்னோட அஞ்சு பிள்ளைங்க வாழ்க்கையும் போச்சு.

அடப்பாவி இப்படி நீயும் செத்து எங்க வாழ்க்கையை முடிச்சிட்டியே என அழுகிறார். எங்க அண்ணன்களுக்கு கஷ்டத்த கொடுத்திட்டே இருக்கேனே எனச் சொல்லி அழுகிறார். மீனா வந்து நான் போய் போலீஸில் சரணடைகிறேன் என்கிறார்.
ஆனால் கோமதி நீ வாழ வேண்டிய பிள்ளை. நான் வாழ்ந்து முடிச்சிட்டேன். நான் போய் சரணடைகிறேன் எனச் சொல்ல இந்த நேரத்தில் அரசிக்கு சதீஷ் கால் செய்கிறார். நான் ஜெயிலுக்கு போனாலும் அரசியை விட்ராதீங்க. அண்ணி கை, காலில் விழுந்து கட்டி வச்சிருங்க என்கிறார்.
இந்த நேரத்தில் ரூமிற்குள் போனை எடுக்க போகும் ராஜி திடீரென குமரவேலின் கை அசைவதை பார்க்கிறார். உடனே மீனா, கோமதி, அரசியை அழைத்து சொல்ல அவர்கள் பார்க்கும் போது உங்களுக்கு தோன்றி இருக்கும் எனக் கூற அந்த நேரத்தில் குமரவேல் கை அசைகிறது.
உடனே ராஜி செக் செய்ய மூச்சு வருவதாக சொல்கிறார். எல்லாரும் ஒருவழியாக நிம்மதி அடைகிறார்கள். ஹாஸ்பிட்டல் செல்லாமல் எனக் கூற உடனே கோமதி அவர்களை தடுத்து நிறுத்துகிறார். கதிர் மற்றும் செந்திலுக்கு ராஜியை போன் செய்து சொல்ல சொல்லுகிறார்.