பெரும்பாலும் நடிகைகள் புதிதாக பட வாய்ப்பை பெறுவதற்காக தங்களது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கமான ஒன்றுதான். தற்போது அந்த பார்முலாவை பார்வதி நாயர் கையில் எடுத்துள்ளார் போலும்.
சமீப காலமாகவே இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பார்வதி நாயர்.
அதன்பிறகு இவர் கமல் நடிப்பில் வெளியான நடிப்பில் உத்தம வில்லன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இதுதவிர மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா மற்றும் சீதக்காதி ஆகிய படங்களிலும் நடித்த்ஹிருந்தார்.
ஆனால் இதில் எந்த படங்களுமே எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றி பெறவில்லை. பார்வதி நாயருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததை அடுத்து சமீபகாலமாக இவரும் மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துள்ளார். எந்த நடிகைகள் போட்டோ போட்டாலும் ஓடி வந்து கமெண்ட் செய்து ஆஜராகும் பிரேம்ஜி, இந்த பதிவிற்கும் ஏமோஜி ஒன்றை கமெண்ட் செய்துள்ளார்.
ஆனால் பார்வதியோ, அந்த கமெண்டை சீண்டக்கூட இல்லை. இவர் கைவசம் தற்போது இரண்டு தமிழ் படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது.
இளையராஜாவைப் பற்றியும்…
தரணி இயக்கத்தில்…
பிக் பாஸ்…
மலையாளத்தில் இந்த…
ஐயா திரைப்படம்…