
Cinema News
பால் போன்ற ஆடையில் மிதக்கும் மலையாள நடிகை!!
கேரளாவை பூர்வீகமாக கொண்டு, அபுதாபியில் பிறந்தவர் நடிகை பார்வதி நாயர். இளம் வயதிலேயே உலகின் நீளமான ஓவிய போட்டியில் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்தவர்.
இளம்வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்த இவர் பல முன்னணி நிறுவனங்களின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

parvathy nair
2012 ஆம் ஆண்டு “பாப்பின்ஸ்” எனும் மலையாள திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர், தொடர்ந்து தமிழ், கன்னட மற்றும் ஹிந்தி படங்கள், மேலும் “வெள்ள ராஜா” எனும் வெப் சீரியஸ் நடித்து திறமை காட்டினார்.
சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது கட்டுடல் அழகிற்கு அதிக வரவேற்பு உள்ளதால், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

parvathy nair
சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயரை பின்தொடர்பவர் எண்ணிக்கை கூடிகொண்டே போவதற்கான காரணம், அவர் தற்போது நெஞ்சை அள்ளும் வெள்ளை உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் புரியும்.